இலங்கை

ஆழ்கடலுக்கு மீன் பிடிக்க சென்ற மீனவர் பலி ; மட்டக்களப்பில் நடந்த துயரம்

Published

on

ஆழ்கடலுக்கு மீன் பிடிக்க சென்ற மீனவர் பலி ; மட்டக்களப்பில் நடந்த துயரம்

ஆழ்கடலுக்கு மீன்பிடிக்கச் சென்ற மீனவர் ஒருவர் நேற்று (29) இரவு சடலமாக மீட்கப்பட்டுள்ளதாக வாழைச்சேனை பொலிஸார் தெரிவித்துள்ளனர்.

கடந்த 24 ஆம் திகதி வாழைச்சேனை துறைமுகத்திலிருந்து ஆழ்கடலுக்கு மீன்பிடிக்க மூன்று பேருடன் சென்ற பிறைந்துறைச்சேனை, பாலைநகர் பகுதியை சேர்ந்த 47 வயதுடைய மீனவரே இவ்வாறு சடலமாக மீட்கப்பட்டுள்ளார்.

Advertisement

மீன் பிடித்துக் கொண்டிருந்தபோது வலையில் சிக்கிய கொப்புரு மீனை இயந்திரப் படகில் ஏற்றுவதக்கு முயற்சித்தபோது மீன் தாக்கியதில் காயமடைந்துள்ளார்.

காயமடைந்த நபரை ஏனைய மீனவர்கள் கரைக்கு கொண்டு வரும்போதே அவர் உயிரிழந்துள்ளார்.

மரணமடைந்த நபரின் உடல் பிரேத பரிசோதனைக்காக வாழைச்சேனை ஆதார வைத்தியசாலையில் வைக்கப்பட்டுள்ளதுடன், இது தொடர்பான மேலதிக விசாரணைகளை வாழைச்சேனை பொலிஸார் மேற்கொண்டு வருகின்றனர்.

Advertisement

Leave a Reply

உங்கள் மின்னஞ்சல் வௌியிடப்பட மாட்டாது. கட்டாயமான புலங்கள் * ஆக குறிக்கப்பட்டுள்ளன

அதிகம் படித்தது

Exit mobile version