இலங்கை
கசிப்புடன் நால்வர் கைது!
கசிப்புடன் நால்வர் கைது!
புத்தூர் கிழக்கு விக்னேஸ்வரா மைதானத்துக்கு அருகில் 7.5 லீற்றர் கசிப்புடன் 4 சந்தேக நபர்கள் கைது செய்யப்பட்டுள்ளனர். அச்சுவேலிப் பொலிஸார் நேற்று மேற்கொண்ட சுற்றி வளைப்பு நடவடிக்கையின்போது அவர்கள் கைதாகினர் என்று பொலிஸார் தெரிவித்தனர். 45 தொடக்கம் 60 வயது இடைப்பட்டவர்களே இவ்வாறு கைது செய்யப்பட்டுள்ளனர்.
கைதுசெய்யப்பட்ட சந்தேகநபர்களை மல்லாகம் நீதிவான் நீதிமன்றத்தில் முற்படுத்த நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது.