இலங்கை

சொகுசு காரில் யாழ்ப்பாண காதல் ஜோடியின் மோசமான செயல்

Published

on

சொகுசு காரில் யாழ்ப்பாண காதல் ஜோடியின் மோசமான செயல்

  முல்லத்தீவு புதுக்குடியிருப்பில் சொகுசுக் காரில் போதைப்பொருள் விற்பனையில் ஈடுபட்ட குற்றச்சாட்டில் காதலர்கள் புதுக்குடியிருப்புப் பொலிஸாரால் கைது செய்யப்பட்டுள்ளனர்.

யாழ்ப்பாணம். இளவாலையைச் சேர்ந்த 23 வயதுடைய யுவதியும் அவரது காதலரான இளைஞனுமே கைது செய்யப்பட்டுள்ளனர்.

Advertisement

யாழ்ப்பாணத்தில் இருந்து சொகுசுக்காரில் போதைப்பொருள்களைக் கொண்டு சென்று விற்பனையில் ஈடுபட்ட போதே இவர்கள் கைதுசெய்யப்பட்டுள்ளனர்.

இதன்போது சந்தேகநபர்களிடம் இருந்து 550 கிராம் கஞ்சா, 160 மில்லிகிராம் ஐஸ் போதைப்பொருள் என்பன மீட்கப்பட்டுள்ளன என்று பொலிஸார் தெரிவித்தனர்.

சந்தேகநபர்கள் இருவரும் முல்லைத்தீவு மாவட்ட நீதிவான் நீதிமன்றில் முற்படுத்தப்பட்டுத்தி சந்தேகநபர் இருவரரையும் தடுத்து வைத்து விசாரணை மேற்கொள்ள புதுக்குடியிருப்புப் பொலிஸார் நீதிமன்றில் அனுமதி கோரினர்.

Advertisement

பிரதான சந்தேகநபரான இளைஞனை மூன்று நாள்கள் பொலிஸ் காவலில் வைத்து விசாரணை செய்ய நீதிமன்று அனுமதித்தது.

மேலும் காதலியான யுவதியை யாழ்ப்பாணம் சிறைச்சாலையில் விளக்கமறியலில் வைக்க நீதிமன்றம் உத்தரவிட்டது.

Advertisement

Leave a Reply

உங்கள் மின்னஞ்சல் வௌியிடப்பட மாட்டாது. கட்டாயமான புலங்கள் * ஆக குறிக்கப்பட்டுள்ளன

அதிகம் படித்தது

Exit mobile version