இலங்கை
தமிழக மீனவர்கள் கைது
தமிழக மீனவர்கள் கைது
தலைமன்னார் கடற்பரப்பில் சட்டவிரோத மீன்பிடியில் ஈடுபட்ட குற்றச்சாட்டில் தமிழக மீனவர்கள் 8 பேர் இலங்கைக் கடற்படையினரால் நேற்று அதிகாலை கைது செய்யப்பட்டுள்ளனர். மீன்பிடிப் படகொன்றும் இலங்கைக் கடற்படையினரால் கைப்பற்றப்பட்டுள்ளது.
கைதுசெய்யப்பட்டவர்களை தலைமன்னாருக்குக் கொண்டு சென்று கடற்றொழில் நீரியல்வளத்துறை அதிகாரிகளிடம் ஒப்படைக்க நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது என்று கடற்படைப் பேச்சாளர் தெரிவித்துள்ளார்.
இந்திய கடற்றொழிலாளர்களுக்கு விதிக்கப்பட்டிருந்த மீன்பிடித் தடைக்காலம் அண்மையில் முடிவடைந்திருந்த நிலையில் அத்துமீறி மீன்பிடியில் ஈடுபட்ட மீனவர்களே கைது செய்யப்பட்டுள்ளனர்.