இலங்கை

நீதி அமைச்சின் மேலதிக செயலாளராக மதுமதி நியமனம்!

Published

on

நீதி அமைச்சின் மேலதிக செயலாளராக மதுமதி நியமனம்!

நீதி அமைச்சின் மேலதிக செயலாளராக யாழ்ப்பாணம் – உரும்பிராயைச் சேர்ந்த திருமதி. மதுமதி வசந்தகுமார் நியமிக்கப்பட்டுள்ளார். 

அண்மையில் இலங்கை நிர்வாக சேவை அதிசிறப்பு தரத்தை மதுமதி பூர்த்தி செய்த நிலையில் நீதி அமைச்சின் மேலதிக செயலாளராக நியமிக்கப்பட்டுள்ளார். 

Advertisement

இவர் உடுவில் பிரதேச செயலாளர், வடமாகாண கூட்டுறவு ஆணையாளர், உள்ளூராச்சி உதவி ஆணையாளர் என பல பதவிகளை வகித்த நிலையில் இறுதியாக வடமாகாண தபால் மா அதிபராக கடமை வகித்தார். இந்நிலையில் தற்போது நீதி அமைச்சில் கடமைகளை பொறுப்பேற்க உள்ளமை குறிப்பிடத்தக்கது.

Leave a Reply

உங்கள் மின்னஞ்சல் வௌியிடப்பட மாட்டாது. கட்டாயமான புலங்கள் * ஆக குறிக்கப்பட்டுள்ளன

அதிகம் படித்தது

Exit mobile version