இலங்கை
நீதி அமைச்சின் மேலதிக செயலாளராக யாழ்ப்பாண பெண்
நீதி அமைச்சின் மேலதிக செயலாளராக யாழ்ப்பாண பெண்
இலங்கை நீதி அமைச்சின் மேலதிக செயலாளராக யாழ்ப்பாணம் – உரும்பிராயைச் சேர்ந்த திருமதி மதுமதி வசந்தகுமார் நியமிக்கப்பட்டுள்ளார்.
அண்மையில் இலங்கை நிர்வாக சேவை அதி சிறப்பு தரத்தை மதுமதி பூர்த்தி செய்த நிலையில் நீதி அமைச்சின் மேலதிக செயலாளராக நியமிக்கப்பட்டுள்ளார்.
இவர் உடுவில் பிரதேச செயலாளர், வடமாகாண கூட்டுறவு ஆணையாளர், உள்ளூராட்சி உதவி ஆணையாளர் என பல பதவிகளை வகித்தவர் ஆவார்.
இந் நிலையில் இறுதியாக வடமாகாண தபால் மா அதிபராக கடமை வகித்தார். இந்நிலையில் தற்போது நீதி அமைச்சில் கடமைகளை பொறுப்பேற்க உள்ளார்.