இலங்கை

போதைப்பொருள் பழக்கத்தால் இளம் குடும்பஸ்தர் உயிரிழப்பு!

Published

on

போதைப்பொருள் பழக்கத்தால் இளம் குடும்பஸ்தர் உயிரிழப்பு!

போதைப்பொருள் பழக்கத்துக்கு அடிமையான 28 வயதான இளம் குடும்பஸ்தர் ஒருவர் திடீரென உயிரிழந்துள்ளார். இவர் 3 பிள்ளைகளின் தந்தையாவார்.
புன்னாலைக் கட்டுவனைச் சேர்ந்த இந்த இளம் குடும்பஸ்தர் கடந்த 27 ஆம் திகதி சுகவீனமுற்ற நிலையில் தெல்லிப்பழை மருத்துவமனையில் சேர்க்கப்பட்டார். மறுநாள் அவர் மேலதிக சிகிச்சைக்காக யாழ்ப்பாணம் போதனா மருத்துவமனைக்கு மாற்றப்பட்டார். அவருக்குச் சிகிச்சைகள் வழங்கப்பட்டு வந்த நிலையில் நேற்றுமுன்தினம் மாலை அவர் உயிரிழந்தார்.

இறப்பு விசாரணைகளை யாழ்ப்பாணம் போதனா மருத்துவமனை திடீர் இறப்பு விசாரணை அதிகாரி ந.பிறேமகுமார் முன்னெடுத்தார். உயிரிழந்தவர் கடந்த ஐந்து மாதங்களாக ஊசிமூலம் போதைப்பொருள் பாவனையில் ஈடுபட்டு வந்துள்ளார் என்பது கண்டறியப்பட்டுள்ளது.

Advertisement

Leave a Reply

உங்கள் மின்னஞ்சல் வௌியிடப்பட மாட்டாது. கட்டாயமான புலங்கள் * ஆக குறிக்கப்பட்டுள்ளன

அதிகம் படித்தது

Exit mobile version