இலங்கை

மசாஜ் நிலையத்தில் தகாத தொழில்; சிக்கிய பெண்கள்

Published

on

மசாஜ் நிலையத்தில் தகாத தொழில்; சிக்கிய பெண்கள்

   மசாஜ் நிலையம் என்ற போர்வையில் இயங்கி வந்த விபச்சார விடுதி ஒன்றில் மேற்கொள்ளப்பட்ட சுற்றிவளைப்பில் மூன்று பெண்கள் உட்பட நால்வர் பயாகலை பொலிஸாரால் நேற்று (29) கைதுசெய்யப்பட்டுள்ளனர்.

களுத்துறையில் பயாகலை பொலிஸ் பிரிவுக்கு உட்பட்ட மக்கொன பிரதேசத்தில் குறித்த மசாஜ் நிலையம் இயங்கி வந்துள்ளது.

Advertisement

பயாகலை பொலிஸாருக்கு கிடைத்த தகவலின் பேரில் மேற்கொள்ளப்பட்ட சுற்றிவளைப்பில் சந்தேக நபர்கள் நால்வரும் கைதுசெய்யப்பட்டுள்ளனர்.

கைதுசெய்யப்பட்டவர்களில் 51 வயதுடைய மசாஜ் நிலையத்தின் உரிமையாளரும் காணப்படுவதாக பொலிஸார் தெரிவித்தனர்.

பேருவளை, அஹுங்கல்ல மற்றும் கடவத்தை ஆகிய பிரதேசங்களைச் சேர்ந்த 23 முதல் 32 வயதுக்குட்பட்ட மூன்று பெண்களே கைதுசெய்யப்பட்டுள்ளதாக பொலிஸார் மேலும் தெரிவித்தனர்.

Advertisement

மேலும் தொடர்பான மேலதிக விசாரணைகளை பயாகலை பொலிஸார் மேற்கொண்டு வருகின்றனர்.

Leave a Reply

உங்கள் மின்னஞ்சல் வௌியிடப்பட மாட்டாது. கட்டாயமான புலங்கள் * ஆக குறிக்கப்பட்டுள்ளன

அதிகம் படித்தது

Exit mobile version