இலங்கை

முன்னாள் எம்.பி ஹிருணிகாவிற்கு நீதிமன்றம் இன்று பிறப்பித்த உத்தரவு

Published

on

முன்னாள் எம்.பி ஹிருணிகாவிற்கு நீதிமன்றம் இன்று பிறப்பித்த உத்தரவு

முன்னாள் நாடாளுமன்ற உறுப்பினர் ஹிருணிகா பிரேமச்சந்திர மற்றும் 15 சந்தேக நபர்களுக்கு எதிரான வழக்கை டிசம்பர் 8 ஆம் திகதி மீண்டும் விசாரணைக்கு எடுத்துக்கொள்ள கொழும்பு நீதவான் நீதிமன்றம் இன்று (30) உத்தரவிட்டுள்ளது.

இந்த முறைப்பாடு இன்று கொழும்பு தலைமை நீதவான்  முன்னிலையில் விசாரணைக்கு வந்தது.

Advertisement

இந்த சம்பவம் தொடர்பான விசாரணைகள் முடிந்துவிட்டதாகவும், அறிக்கைகள் சட்டமா அதிபருக்கு அனுப்பப்பட்டுள்ளதாகவும் கருவாத்தோட்ட பொலிஸார் நீதிமன்றத்திற்குத் தெரிவித்தனர்.

அதன்படி, வழக்கு விசாரணைகளை டிசம்பர் 8 ஆம் திகதி மீண்டும் விசாரணைக்கு எடுத்துக்கொள்ள உத்தரவிட்ட நீதவான், அன்றைய தினம் சட்டமா அதிபரின் அறிவுறுத்தல்கள் குறித்து நீதிமன்றத்திற்குத் தெரிவிக்குமாறு பொலிஸாருக்கு அறிவுறுத்தினார்.

2023 ஆம் ஆண்டு கொழும்பில் உள்ள சுதந்திர சதுக்கத்திற்கு அருகில் வீதி நாடகம் ஒன்றை ஏற்பாடு செய்து பொதுமக்களுக்கு இடையூறு விளைவித்ததாக ஹிருணிகா பிரேமச்சந்திர உள்ளிட்ட சந்தேக நபர்களுக்கு எதிராக பொலிஸார் இந்த முறைப்பாட்டை பதிவு செய்துள்ளமை குறிப்பிடதக்கது.

Advertisement

Leave a Reply

உங்கள் மின்னஞ்சல் வௌியிடப்பட மாட்டாது. கட்டாயமான புலங்கள் * ஆக குறிக்கப்பட்டுள்ளன

அதிகம் படித்தது

Exit mobile version