இலங்கை
முற்றுகையிடப்பட்ட வீடு ; ரகசிய தகவலால் மீட்கபட்ட பல மில்லியன் பெறுமதியான பொருட்கள்
முற்றுகையிடப்பட்ட வீடு ; ரகசிய தகவலால் மீட்கபட்ட பல மில்லியன் பெறுமதியான பொருட்கள்
வத்தளை, பள்ளியவத்தையில் உள்ள ஒரு வீட்டில் மறைத்து வைக்கப்பட்டிருந்த கிட்டத்தட்ட 39 கிலோ கேரள கஞ்சா தொகை கண்டுபிடிக்கப்பட்டுள்ளது.
பொலிஸாருக்கு கிடைத்த ரகசிய தகவலின் அடிப்படையில் இந்த சோதனை மேற்கொள்ளப்பட்டது, கைப்பற்றப்பட்ட போதைப்பொருள் தொகையின் மதிப்பு 20 மில்லியன் ரூபாவுக்கும் அதிகமாகும் என்று பொலிஸார் தெரிவித்தனர்.
சோதனை நடத்தப்பட்ட நேரத்தில், போதைப்பொருள் தொகை விநியோகிக்க தயாராக இருந்ததாகவும், சோதனையின் போது 6 சந்தேக நபர்களை பொலிஸார் கைது செய்துள்ளதாகவும் தெரிவித்தனர்.
இது தொடர்பான மேலதிக விசாரணைகளை பொலிஸார் மேற்கொண்டு வருகின்றனர்