இலங்கை

யானை தாக்கி சிவில் பாதுகாப்பு அதிகாரி பலி

Published

on

யானை தாக்கி சிவில் பாதுகாப்பு அதிகாரி பலி

  அநுராதபுரத்தில் மகாவிலாச்சி பொலிஸ் பிரிவுக்கு உட்பட்ட பேமடுவ பகுதியில் காட்டு யானை தாக்கி சிவில் பாதுகாப்பு அதிகாரி ஒருவர் உயிரிழந்துள்ளதாக மகாவிலாச்சி பொலிஸார் தெரிவித்தனர்.

இந்த சம்பவம் நேற்று (29) இடம்பெற்றுள்ளதாக பொலிஸார் தெரிவித்தனர்.

Advertisement

வில்பத்து சிவில் பாதுகாப்பு படை முகாமில் பணியாற்றிய டி.எம். அனுர குமார திசாநாயக்க என்ற 47 வயதுடைய சிவில் பாதுகாப்பு அதிகாரியே உயிரிழந்துள்ளார்.

கடந்த சனிக்கிழமை (28) இரவு தனது பயிர்களை காட்டு யானைகளிடமிருந்து பாதுகாப்பதற்காக தோட்டத்திற்கு சென்றிருந்த போது
சிவில் பாதுகாப்பு அதிகாரி காட்டு யானை தாக்கி உயிரிழந்துள்ளதாக பொலிஸார் மேலும் தெரிவித்தனர்.

Advertisement

Leave a Reply

உங்கள் மின்னஞ்சல் வௌியிடப்பட மாட்டாது. கட்டாயமான புலங்கள் * ஆக குறிக்கப்பட்டுள்ளன

அதிகம் படித்தது

Exit mobile version