இலங்கை
ருத்ராட்சம் அணிந்தவர்கள் அதை அடிக்கடி கழற்றலாமா?
ருத்ராட்சம் அணிந்தவர்கள் அதை அடிக்கடி கழற்றலாமா?
ருத்ராட்சம் அணிபவர்களின் எண்ணிக்கை நாளுக்கு நாள் அதிகரித்து வந்தாலும் அது பற்றிய சந்தேகங்களும், தவறான புரிதல்களும், பொய்யான நம்பிக்கைகளும் இன்னும் பலரிடமும் உள்ளது.
அப்படி ருத்ராட்சம் அணிந்தவர்கள் அதை அடிக்கடி கழற்றலாமா என்ற சந்தேகத்திற்கான விரிவான விளக்கத்தை தெரிந்து கொள்ளலாம்.
ருத்ராட்சத்தின் அற்புத பலன்கள் பற்றி தெரிந்து, இதை பலரும் அணிய துவங்கி இருந்தாலும் இத குறித்து இன்னும் பல சந்தேகங்கள் பலருக்கும் உள்ளது. ருத்ராட்சம் அணிபவர்கள் அதை பற்றி அவசியம் தெரிந்து கொள்ள வேண்டிய விஷயங்கள் பற்றி தெரிந்து கொள்ளலாம்.
வாழ்நாளில் ருத்ராட்சமும் விபூதியும் அணிந்தவர் ஒருபோதும் யமலோகம் செல்வதில்லை. ஐஸ்வர்யங்கள் அருளும் ருத்ராட்சம் ஆன்மாவிற்கு மஹா பேரானந்தத்தைத் தரும். ருத்ராட்சம் அணிந்து ஒரு முறை எவ்வித மந்திரம் கூறினாலும், அதை 1,00,00,000 முறை உச்சரித்த பலனைத் தரும். ருத்ராட்சம் அணிந்து மகாம்ருத்யுஞ்சய மந்திரம் உச்சரிப்பவன் எல்லாவித நோய்களிலிருந்தும் விடுபடுகிறான்.
அவனை அகால மரணமோ, துர்மரணமோ நெருங்குவதில்லை. சிவபெருமான் கண்களிலிருந்து தோன்றியது. ருத்ராட்ஷம், அதை அணிபவரை அவர் கண்போலக் காப்பாற்றுவார். எனவே அனைவரும் கண்டிப்பாக ஐந்து முக ருத்ராட்ஷமாவது எப்போதும் கண்டிப்பாக அணிந்திருக்க வேண்டும்.
ருத்ராட்ஷத்தை யார் வேண்டுமானாலும் அணியலாம். எல்லா நேரத்திலும் அணிந்திருக்கலாம். நீர் பருகும் போதும், உணவு உண்ணும் போதும், தூங்கும் போதும், எல்லாக் காலத்திலும் ருத்ராட்ஷம் அணிந்திருக்க வேண்டும் என்று சிவ பெருமானே கூறியுள்ளதாக சிவபுராணம் தெரிவிக்கிறது. சிறுவர், சிறுமியர் ருத்ராட்ஷம் அணிவதால் அவர்களின் படிப்புத் திறமை பளிச்சிடும்.
ருத்ராட்ஷத்தை பெண்கள் அணிந்தால் தீர்க்க சுமங்களியாக மஞ்சள் குங்குமத்தோடு வாழ்வார்கள். இதனால் அவர்களுடைய கணவருக்கும் தொழிலில் வெற்றியும் இல்லத்தில் லட்சுமி கடாஷ்சமும் நிறைந்திருக்கும். ஆகையால் கண்டிப்பாக ருத்ராட்ஷம் அணிய வேண்டும்.
எல்லா இடங்களிலும் எளிதில், மிக மிக சாதாரண விலையில் கிடைக்கும் ஐந்து முக ருத்ராட்ஷம் அணிவதே போதுமானது. ஈசனின் திருமுகங்கள் ஐந்து. நமச்சிவாய மந்திரம் ஐந்தெழுத்து. பஞ்சபூதங்கள் ஐந்து (நிலம், நீர், நெருப்பு, காற்று மற்றும் ஆகாயம்). நமது கை கால் விரல்கள் ஐந்து. புலன்கள் ஐந்து. ஆகையால் மிக அதிகமாக ஐந்து முக ருத்ராட்ஷத்தையே படைக்கின்றார்.
ஆகையால் ஐந்து முக ருத்ராட்ஷங்கள் அணிவதே மிகச் சிறப்பு. இதை ஆண், பெண் மற்றும் குழந்தைகள் என சகலமானவர்களும் அணியலாம். ஐந்து முக ருத்ராட்ஷத்திலேயே மற்ற எல்லா முக ருத்ராட்ஷங்களினால் கிடைக்கின்ற பலன்களும் அடங்கிவிடும்.
பெண்களின் பெருந்தெய்வமாக விளங்குபவர் ஆதிபராசக்தி. அவள் ருத்ராட்ஷம் அணிந்திருப்பதை, அருணாசலபுராணம் நமக்கு வழி காட்டுவதற்காகத்தானே அம்பிகையை ருத்ராட்ஷம் அணிந்து கொள்கிறாள். எனவே பெண்கள் தாராளமாக அம்பிகை காட்டும் வழியைப் பின்பற்றி ருத்ராட்ஷம் அணிய வேண்டும். மேலும், சிவமஹா புராணத்திலும் பெண்கள் கட்டாயம் ருத்ராட்ஷம் அணிய வேண்டும் என்று சிவபெருமானே வலியுறுத்தியுள்ளார்.
பெண்கள், தங்களுடைய தாலிக்கொடியில், அவரவர் மரபையொட்டி சைவ, வைணவச் சின்னங்களைக் கோர்த்து தான் அணிந்திருக்கின்றனர். இவற்றைப் போல் ருத்ராட்ஷத்தையும் எல்லா நாட்களிலும் கழற்றாமல் அணிய வேண்டும். ருத்ராட்ஷம் வாழும் இந்த உடம்பிற்காக அல்ல. உயிரின் ஆத்மாவிற்காக சிவபெருமானால் அருளப்பட்டது.
எனவே தூங்கும்போதும் கூட ருத்ராட்ஷத்தைக் கழற்றி வைக்க வேண்டிய அவசியம் கிடையாது. திருமணம் ஆகாதவர்கள், குழந்தை பாக்கியம் இல்லாதவர்கள், வேலை வாய்ப்பு இல்லாதவர்களும் கண்டிப்பாக ருத்ராட்ஷம் அணிந்து தினந்தோறும் 108 முறை எழுத்தாலோ மனதாலோ பஞ்சாட்சரத்தை சொல்லி வந்தால் 18 மாதத்தில் அவர்களின் பிரார்த்தனைகள் நிறைவேறும்.
ருத்ராட்சம் அணிவதால் இறைவனின் பரிபூரண அருள் கிடைக்கும். திருநீறு தரித்தல், ருத்ராட்ஷம் அணிதல், பஞ்சாட்சர மந்திரமான “ஓம் நமசிவாய” உச்சரித்தல், இம் மூன்றும் ஒரு சேரச் செய்து வந்தால் முக்தி எனும் மஹா பேரானந்தத்தை அடைய முடியும்.