இலங்கை
விபத்தில் மீனவர் உயிரிழப்பு!
விபத்தில் மீனவர் உயிரிழப்பு!
வடமராட்சி கிழக்கு, நாகர்கோயில் கடற்கரைப் பகுதியில் நேற்று அதிகாலை நடந்த விபத்தில் காயமடைந்த மீனவர் உயிரிழந்துள்ளார். படகுகளைக் கழுவிக் கொண்டிருந்தபோது அலையில் அள்ளுண்ட படகு, மீனவர் மீது கவிழ்ந்ததில் அவர் படுகாயமடைந்தார். உடனடியாக அவர் பருத்தித்துறை மருத்துவமனையில் சேர்க்கப்பட்டபோதும் உயிரிழந்துள்ளார். இந்தச் சம்பவம் தொடர்பான விசாரணைகள் மருதங்கேணிப் பொலிஸாரால் முன்னெடுக்கப்பட்டுள்ளது.