இலங்கை

ஆனி உத்திர நாளில் கேட்ட வரம் கிடைக்க சிவனை எப்படி வழிபட வேண்டும்?

Published

on

ஆனி உத்திர நாளில் கேட்ட வரம் கிடைக்க சிவனை எப்படி வழிபட வேண்டும்?

சிவபெருமானின் நடராஜர் திருமேனிக்கு செய்யப்படும் மிக முக்கியமான அபிஷேக நாள் ஆனி உத்திர திருமஞ்சனம். ஆனி மாதத்தில் (ஜூன்-ஜூலை) உத்திர நட்சத்திர நாளில் இது கொண்டாடப்படுகிறது. சிவனின் நடனம் உலக இயக்கத்தை உணர்த்துகிறது.

அபிஷேக பிரியரான சிவ பெருமானுக்கு அவரது மனதை குளிர செய்வதற்காக பல்வேறு பொருட்களைக் கொண்டு அபிஷேகங்கள் நடத்தப்படும். இந்த நாளில் நடராஜருக்கு சிறப்பு அபிஷேகங்கள் மற்றும் அர்ச்சனைகள் செய்யப்படுகின்றன.

Advertisement

இந்த நாளில் திருமஞ்சன தரிசனம் கண்டாலும், சிவ தரிசனம் கண்டாலும் கேட்ட வரங்கள் கிடைக்கும். இந்த நாளில் சிவனை எப்படி வழிபட வேண்டும் என்பதை தெரிந்து கொள்ளலாம்.

சிவனின் கைகளில் உள்ள பொருட்கள் மற்றும் நடனத்தின் நிலை ஆகியவை முக்கியத்துவம் வாய்ந்தவை. வலது கையில் அராவம் (அழிவு), இடது கையில் அக்னி (அழித்தல்), ஒரு கால் மேலே (கிருபை), மற்றொரு கால் கீழே (அஹங்காரத்தை அழித்தல்) உள்ளன.

நடராஜரை சுற்றி உள்ள நெருப்பு வளையமானது உலகியல் இன்பங்கள், பிறப்பு-இறப்பு என்ற வாழ்க்கை சுழற்சியை காட்டுகிறது. சிவபெருமான் ஆனந்த தாண்டவம் ஆடியது, எல்லா உயிர்களுக்கும் ஞானம், விடுதலை, கருணை ஆகியவற்றை வழங்கும் செயலாகும்.

Advertisement

இது உலகம் இயங்கும் விதியையும் காட்டுகிறது.

“திருமஞ்சனம்” என்றால் “புனித நீராடல்” என்று பொருள். ஆனி உத்திர நாளில் நடராஜப் பெருமானுக்கு சிறப்பு அபிஷேகங்கள் மற்றும் அர்ச்சனைகள் நடத்தப்படுகின்றன.

இவ்விழா பஞ்ச சபைகள் என போற்றப்படும் சிதம்பரம், மதுரை, திருவாலங்காடு, திருநெல்வேலி, குற்றாலம் ஆகிய ஐந்து தலங்களிலும் மிக சிறப்பான விழாவாக கொண்டாடப்படுகிறது.

Advertisement

நடராஜரின் வடிவம் சிவபெருமானின் ஐந்து தொழில்களான படைத்தல், காத்தல், அழித்தல், மறைத்தல் மற்றும் அருள் புரிதல் ஆகியவற்றை குறிப்பதாகும். இந்த அபிஷேகம் இந்த ஐந்து தொழில்களையும் போற்றும் விதமாக நடைபெறுகிறது.

ஆனி உத்திர நாளில்தான் சிவபெருமான் மாணிக்கவாசகருக்கு குருந்த மரத்தடியில் தோன்றி உபதேசம் வழங்கினார் என்று நம்பப்படுகிறது. மாணிக்கவாசகர் “திருவாசகம்” என்ற புகழ்பெற்ற பக்தி நூலை எழுதியவர். இதனால் இந்த நாள் சிவபக்தர்களுக்கு மிகவும் முக்கியத்துவம் வாய்ந்தது.

ஆனி திருமஞ்சனத்தை தரிசிப்பதால் செல்வ வளம், மகிழ்ச்சி, துன்பங்களில் இருந்து விடுதலை, சிவபெருமானின் அருள், திருமண வாழ்க்கையில் ஏற்படும் பிரச்சனைகளுக்கு தீர்வு, பண நெருக்கடி மற்றும் நோய்களுக்கு தீர்வு ஆகியவை கிடைக்கும்.

Advertisement

ஆனி திருமஞ்சனம் நடைபெறும் சமயத்தில் முப்பத்து முக்கோடி தேவர்களும் நடராஜருக்கு நடைபெறும் அபிஷேகத்தை காண சிவன் சன்னதியில்எழுந்தருள்வதாக ஐதீகம்.

அந்த சமயத்தில் நாமும் சிவன் சன்னதியில், சிவ தரிசனம் கண்டு, நம்முடைய மனக்குறைகளை சொல்லி முறையிட்டால், சிவனின் அருளும், தேவர்களின் அருளும் ஒரே நேரத்தில் கிடைப்பதால் நம்முடைய வேண்டுதல்கள் அனைத்தும் உடனடியாக நிறைவேறும்.

சிவ பெருமான் மனம் குளிர்ந்திருக்கும் நேரத்தில் நாம் என்ன கேட்டாலும் உடனடியாக கிடைக்கும்.

Advertisement

ஆனி திருமஞ்சன நாளில் மாணிக்கவாசகர் அருளிய திருவாசகத்தை படிப்பது மிகவும் சிறப்பு.

முழுவதும் படிக்க முடியாதவர்கள் குறைந்தபட்சம் சிவபுராணத்தை மட்டுமாவது படிக்கலாம். சிவ புராணம் அல்லது திருவாசகம் எதை படித்தாலும் அதன் பொருள் உணர்ந்து படித்தால் அதன் முழு பலனும், சிவனின் அருளும் கிடைக்கும்.

Advertisement

Leave a Reply

உங்கள் மின்னஞ்சல் வௌியிடப்பட மாட்டாது. கட்டாயமான புலங்கள் * ஆக குறிக்கப்பட்டுள்ளன

அதிகம் படித்தது

Exit mobile version