இலங்கை

கோர விபத்துக்களால் பலியான இளைஞர்கள் ; விசாரணைகள் தீவிரம்

Published

on

கோர விபத்துக்களால் பலியான இளைஞர்கள் ; விசாரணைகள் தீவிரம்

நாட்டின் பல பகுதிகளில் இடம்பெற்ற வீதி விபத்துகளில் 2 இளைஞர்கள் உயிரிழந்துள்ளனர். 

 பூநகரி பொலிஸ் பிரிவுக்குட்பட்ட யாழ்ப்பாணம் – மன்னார் வீதிக்கு அருகில், வேன் ஒன்று எதிர் திசையில் இருந்து வந்த மோட்டார் சைக்கிள் மீது மோதியதில் ஏற்பட்ட விபத்தில் இளைஞன் ஒருவன் உயிரிழந்துள்ளார்.

Advertisement

சம்பவத்தில் உயிரிழந்தவர் மிருசுவில் பகுதியைச் சேர்ந்த 27 வயதுடைய இளைஞன் என தெரிவிக்கப்பட்டுள்ளது.

மேலும், மாங்குளம் பொலிஸ் பிரிவுக்குட்பட்ட கண்டி – யாழ்ப்பாணம் வீதியில் 245 வது கிலோ மீட்டர் தூண் அருகே, மோட்டார் சைக்கிள் ஒன்று லொறியுடன் மோதி விபத்துக்குள்ளாகியுள்ளது.

விபத்தில் மோட்டார் சைக்கிள் ஓட்டுநர், பின்னால் இருந்த இருவர் மற்றும் லொரி சாரதி ஆகியோர் பலத்த காயமடைந்து கிளிநொச்சி மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டதாகவும், இதில் மோட்டார் சைக்கிள் ஓட்டுநர் உயிரிழந்ததாகவும் பொலிஸார் தெரிவித்தனர்.

Advertisement

இந்த சம்பவத்தில் கிளிநொச்சி பகுதியைச் சேர்ந்த 24 வயது இளைஞனே உயிரிழந்துள்ளார்.

Leave a Reply

உங்கள் மின்னஞ்சல் வௌியிடப்பட மாட்டாது. கட்டாயமான புலங்கள் * ஆக குறிக்கப்பட்டுள்ளன

அதிகம் படித்தது

Exit mobile version