இலங்கை

விழிப்புணர்வு செயலமர்வு நாளை!

Published

on

விழிப்புணர்வு செயலமர்வு நாளை!

சித்திரவதையினால் பாதிக்கப்பட்டோருக்கு ஆதரவளிக்கும் சர்வதேச தினத்தை முன்னிட்டு இலங்கை மனித உரிமைகள் ஆணைக்குழுவின் யாழ்ப்பாண அலுவலகமானது விழிப்புணர்வு செயலமர்வு ஒன்றினை ஏற்பாடு செய்துள்ளதாக இலங்கை மனித உரிமைகள் ஆணைக்குழுவின் யாழ். பிராந்திய இணைப்பாளர் க.கனகராஜ் தெரிவித்துள்ளார்.

அவர் மேலும் தெரிவிக்கையில்:- இந்த விழிப்புணர்வு செயலமர்வானது யாழ்ப்பாணம், காங்கேசன்துறை மற்றும் கிளிநொச்சி பொலிஸ் பிரிவுகளில் கடமையாற்றும் உயர்பொலிஸ் அதிகாரிகளுக்காக 02.07.2025 அன்று மு.ப 09.00 முதல் 12.30 வரை யாழ்ப்பாணம் பொலிஸ் நிலைய கேட்போர் கூடத்தில் நடாத்தப்படவுள்ளது.

Advertisement

இந்த விழிப்புணர்வு செயலமர்வில்  இலங்கை மனித உரிமைகள் ஆணைக்குழுவின் ஆணையாளர் பிரதான வளவளராக கலந்துக்கொண்டு கருத்துரை வழங்கவுள்ளார் என அவர் குறிப்பிட்டுள்ளார்.

Leave a Reply

உங்கள் மின்னஞ்சல் வௌியிடப்பட மாட்டாது. கட்டாயமான புலங்கள் * ஆக குறிக்கப்பட்டுள்ளன

அதிகம் படித்தது

Exit mobile version