இலங்கை

வனப்பகுதியிலிருந்து கைத்துப்பாக்கி, தோட்டாக்கள் மீட்பு

Published

on

வனப்பகுதியிலிருந்து கைத்துப்பாக்கி, தோட்டாக்கள் மீட்பு

  கம்பஹாவில் கந்தானை பொலிஸ் பிரிவுக்கு உட்பட்ட கந்தவல பிரதேசத்தில் உள்ள வனப்பகுதியிலிருந்து கைத்துப்பாக்கி மற்றும் 4 தோட்டாக்கள் நீர்கொழும்பு பொலிஸ் குற்றப் புலனாய்வு பிரிவினரால் நேற்று செவ்வாய்க்கிழமை (01) கைப்பற்றப்பட்டுள்ளன.

நீர்கொழும்பு பொலிஸ் குற்றப் புலனாய்வு பிரிவினருக்கு கிடைத்த தகவலின் பேரில் மேற்கொள்ளப்பட்ட சோதனையில் இந்த கைத்துப்பாக்கி மற்றும் தோட்டாக்கள் கைப்பற்றப்பட்டுள்ளன.

Advertisement

கைப்பற்றப்பட்ட கைத்துப்பாக்கி மற்றும் தோட்டாக்கள் வெளிநாட்டில் தயாரிக்கப்பட்டவை எனவும் சம்பவம் தொடர்பில் எவரும் கைதுசெய்யப்படவில்லை என்றும் பொலிஸார் தெரிவித்தனர்.

மேலதிக விசாரணைகளை நீர்கொழும்பு பொலிஸ் குற்றப் புலனாய்வு பிரிவினர் மேற்கொண்டு வருகின்றனர். 

Advertisement

Leave a Reply

உங்கள் மின்னஞ்சல் வௌியிடப்பட மாட்டாது. கட்டாயமான புலங்கள் * ஆக குறிக்கப்பட்டுள்ளன

அதிகம் படித்தது

Exit mobile version