இலங்கை

சனி மற்றும் குருவின் அருளால் வாழ்வில் வெற்றி பெறும் ராசிக்காரர்கள்

Published

on

சனி மற்றும் குருவின் அருளால் வாழ்வில் வெற்றி பெறும் ராசிக்காரர்கள்

சுப கிரகமான குரு பகவான் ஜூலை 9 ஆம் திகதி உதயமாகவுள்ளார். அவர் தற்போது மிதுன ராசியில் அஸ்தமன நிலையில் உள்ளார். நீதியின் கடவுளான சனி பகவான் ஜூலை 13 ஆம் திகதி வக்ர பெயர்ச்சி அடையவுள்ளார்.

ஜூலை மாதம் நடக்கவுள்ள சனி வக்ர பெயர்ச்சி மற்றும் குரு உதயத்தின் தாக்கம் அனைத்து ராசிகளிலும் காணப்படும். எனினும் சில ராசிகளில் இதனால் அதிகப்படியான நன்மைகள் ஏற்படும். அந்த ராசிக்காரர்கள் யார் யார் என நாம் இங்கு பார்ப்போம்.

Advertisement

குரு பெயர்ச்சிக்கு பிறகு வரும் குரு உதயமும் சனி பெயர்ச்சிக்கு பிறகு வரும் சனி வக்ர பெயர்ச்சியும் ரிஷப ராசிக்காரர்களுக்கு வருமானத்தில் மிகப்பெரிய அதிகரிப்பை அளிக்கும். முதலீடு செய்ய இது ஒரு நல்ல நேரமாக இருக்கும். பழைய முதலீட்டிலிருந்து திடீர் பண ஆதாயங்களைப் பெறுவீர்கள். வேலை தொடர்பாக நீங்கள் நீண்ட பயணங்களை மேற்கொள்ள நேரிடும். இந்த பயணங்களால் அனுகூலமான நன்மைகள் கிடைக்கும்.

சனி வக்ர பெயர்ச்சி மற்றும் குரு உதயத்தின் தாக்கத்தால் மிதுன ராசிக்காரர்களுக்கு திருமண யோகம் கிட்ட வாய்ப்புள்ளது. வேலையில்லாதவர்களுக்கு வேலை வாய்ப்புகள் கிடைக்கும். வேலைகளை மாற்ற நினைப்பவர்களுக்கு இது ஒரு சிறந்த நேரமாக இருக்கும். பணி இடத்தில் ஊதிய உயர்வும் பதவி உயர்வும் கிடைக்கும். உங்கள் நம்பிக்கை உச்சத்தில் இருக்கும்.

குருவின் உதயமும் சனியின் வக்கிரமும் கடக ராசிக்காரர்களுக்கு சாதகமாக இருக்கும். அதிர்ஷ்டத்தின் முழு ஆதரவையும் பெறுவீர்கள். பணி இடத்திலும் தொழில் வாழ்க்கையில் அதிக முன்னேற்றம் அடையலாம். போட்டித் தேர்வுகளுக்குத் தயாராகும் நபர்கள் வெற்றி பெற வாய்ப்புள்ளது. வீட்டில் சுப காரியங்கள் நடக்கும். பணியிடத்தில் உங்களுக்கு ஒரு பெரிய பொறுப்பு கிடைக்கும் வாய்ப்புகள் உள்ளன.

Advertisement

Leave a Reply

உங்கள் மின்னஞ்சல் வௌியிடப்பட மாட்டாது. கட்டாயமான புலங்கள் * ஆக குறிக்கப்பட்டுள்ளன

அதிகம் படித்தது

Exit mobile version