இலங்கை

இறுதிச் சடங்கில் பொலிஸாரால் குழப்பம்; பொதுமக்கள் மீது கண்ணீர் புகை பிரயோகம்

Published

on

இறுதிச் சடங்கில் பொலிஸாரால் குழப்பம்; பொதுமக்கள் மீது கண்ணீர் புகை பிரயோகம்

    போதைப்பொருள் கடத்தல் வழக்கு தொடர்பாக பொலிஸாருக்கு தகவல் வழங்கியதற்காக கொலை செய்யப்பட்டதாகக் கூறப்படும் கஹவத்தையைச் சேர்ந்த இளைஞனின் இறுதிச் சடங்குகள் இன்று (03) பிற்பகல் குடும்ப மயானத்தில் நடைபெற்றன.

இமந்த சுரஞ்சன் என்ற 22 வயதுடைய நபரே இவ்வாறு கொலை செய்யப்பட்டவரார்.

Advertisement

இளைஞனின் இறுதிச் சடங்கைத் தொடர்ந்து பொலிஸாருக்கு பிரதேசவாசிகளுக்கும் இடையே பதட்டமான சூழ்நிலை ஒன்று ஏற்பட்டுள்ளது.

குறித்த பிரதேசத்தில் பாதுகாப்பை வழங்க சுமார் 150 பொலிஸார் நிறுத்தப்பட்டிருந்த சூழ்நிலையிலேயே இவ்வாறானதொரு சம்பவம் இடம்பெற்றுள்ளது.

கொலை செய்யப்பட்ட இளைஞனின் உறவினர்களும் பிரதேசவாசிகளும் பொலிஸார் மீது குற்றம்சாட்டி அவர்கள் மீது கற்களை வீசியுள்ளனர்.

Advertisement

இதனையடுத்து பிரதேசவாசிகளை கட்டுப்படுத்த கண்ணீர் புகை பிரயோகத்தை பொலிஸார் மேற்கொண்டதால் அங்கு பதற்றநிலை ஏற்பட்டதாக கூறப்படுகின்றது.

  கண்ணீர் புகை குண்டு தாக்குதலில் பல கிராம மக்கள் காயமடைந்துள்ளனர்.

இதற்கிடையில், குறித்த இளைஞரைக் கொன்றதாகக் குற்றம் சாட்டப்பட்ட நபரின் வீட்டில் ஒரு கும்பல் முச்சக்கர வண்டிக்கு தீ வைத்ததாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

Advertisement

30 ஆம் தேதி இரவு, புங்கிரியா, கஹவத்த, பழன்சூரியகம பகுதியில் உள்ள ஒரு வீட்டில் இரண்டு சகோதரர்களும் மற்றொரு இளைஞரும் பேசிக் கொண்டிருந்தபோது, இந்த சம்பவம் நடந்தது.

அந்த நேரத்தில், காவல்துறையினர் போல் வேடமிட்ட ஒரு குழு இரண்டு இளைஞர்களைக் கடத்திச் சென்று, இளைஞர்களில் ஒருவரை சுட்டுக் கொன்றது.

கடத்தப்பட்ட மற்றொரு இளைஞர் துப்பாக்கிச் சூட்டுக் காயங்களுடன் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டமையும் குறிப்பிடத்தக்கது.

Advertisement

Leave a Reply

உங்கள் மின்னஞ்சல் வௌியிடப்பட மாட்டாது. கட்டாயமான புலங்கள் * ஆக குறிக்கப்பட்டுள்ளன

அதிகம் படித்தது

Exit mobile version