இலங்கை
இலங்கையில் ஓய்வூதியம் பெறுவோருக்கு மகிழ்ச்சித்தகவல்; அதிகரிக்கும் தொகை
இலங்கையில் ஓய்வூதியம் பெறுவோருக்கு மகிழ்ச்சித்தகவல்; அதிகரிக்கும் தொகை
இலங்கையில் ஓய்வூதியம் பெறுவோரிற்கு அதிகரிக்கப்பட்ட ஓய்வூதியங்கள் இம்மாதம் முதல் வழங்கப்படவுள்ளது.
வரவு செலவுத் திட்ட அறிவிக்கப்பட்ட ஓய்வூதிய உயர்வு, இம்மாதம் முதல் வழங்கப்படும் என்று பொது நிர்வாகம், மாகாண சபைகள் மற்றும் உள்ளூராட்சி அமைச்சகம் அறிவித்துள்ளது.
இதனால், ஓய்வுபெற்ற 500,000 க்கும் மேற்பட்ட அரசு ஊழியர்கள் இந்த உயர்வான ஓய்வூதியத்திற்குத் தகுதியாளர்களாக இருக்கிறார்கள் என அமைச்சர் சந்தன அபேரத்ன தெரிவித்துள்ளார்.