இலங்கை
காரைநகரில் விபத்து; இளைஞன் உயிரிழப்பு!
காரைநகரில் விபத்து; இளைஞன் உயிரிழப்பு!
காரைநகர் பாலத்தடியில் இடம்பெற்ற விபத்தில் படுகாயமடைந்த இளைஞன் இன்றையதினம் உயிரிழந்துள்ளார். காரைநகர் – களபூமியைச் சேர்ந்த சங்கரப்பிள்ளை பவன்ராஜ் (வயது – 22) என்பவரே இவ்வாறு உயிரிழந்துள்ளார்.
இச்சம்பவம் குறித்து மேலும் தெரியவருகையில்;
குறித்த இளைஞன் பயணித்த மோட்டார் சைக்கிளும் லான்ட்மாஸ்டர் ஒன்றும் கடந்த 1ஆம் திகதி இரவு காரைநகர் பாலத்தடியில் மோதி விபத்து சம்பவித்தது. இந்நிலையில் படுகாயமடைந்த இளைஞன் யாழ்ப்பாணம் போதனா மருத்துவமனையில் சேர்ப்பிக்கப்பட்டு சிகிச்சை பெற்று வந்த நிலையில் இன்றையதினம் உயிரிழந்துள்ளார்.
அவரது சடலம் மீதான மரண விசாரணைகளை திடீர் மரண விசாரணை அதிகாரி வின்சன் அன்ரலா மேற்கொண்டார். உடற்கூற்று பரிசோதனைகளின் பின்னர் சடலம் உறவினர்களிடம் ஒப்படைக்கப்பட்டுள்ளது.
இலங்கை
காரைநகரில் விபத்து; இளைஞன் உயிரிழப்பு!
காரைநகரில் விபத்து; இளைஞன் உயிரிழப்பு!
காரைநகர் பாலத்தடியில் இடம்பெற்ற விபத்தில் படுகாயமடைந்த இளைஞன் இன்றையதினம் உயிரிழந்துள்ளார். காரைநகர் – களபூமியைச் சேர்ந்த சங்கரப்பிள்ளை பவன்ராஜ் (வயது – 22) என்பவரே இவ்வாறு உயிரிழந்துள்ளார்.
இச்சம்பவம் குறித்து மேலும் தெரியவருகையில்;
குறித்த இளைஞன் பயணித்த மோட்டார் சைக்கிளும் லான்ட்மாஸ்டர் ஒன்றும் கடந்த 1ஆம் திகதி இரவு காரைநகர் பாலத்தடியில் மோதி விபத்து சம்பவித்தது. இந்நிலையில் படுகாயமடைந்த இளைஞன் யாழ்ப்பாணம் போதனா மருத்துவமனையில் சேர்ப்பிக்கப்பட்டு சிகிச்சை பெற்று வந்த நிலையில் இன்றையதினம் உயிரிழந்துள்ளார்.
அவரது சடலம் மீதான மரண விசாரணைகளை திடீர் மரண விசாரணை அதிகாரி வின்சன் அன்ரலா மேற்கொண்டார். உடற்கூற்று பரிசோதனைகளின் பின்னர் சடலம் உறவினர்களிடம் ஒப்படைக்கப்பட்டுள்ளது.
Leave a Reply