இலங்கை

திருகோணமலையில் அதிகரிக்கும் சோதனை சாவடிகள்!

Published

on

திருகோணமலையில் அதிகரிக்கும் சோதனை சாவடிகள்!

திருகோணமலை மாவட்டத்தில் சுற்றுலா பயணிகளின் நலன் கருதி விசேட சோதனை சாவடிகள் அமைக்கப்பட்டுள்ளன. 

 தற்போது நாட்டில் சுற்றுலாப் பயணிகளின் வருகை அதிகரித்துள்ள நிலையில் திருகோணமலைப் பகுதிக்கு வெளிநாட்டவர்கள் அதிகளவில் வருகை தர ஆரம்பித்துள்ளனர். 

Advertisement

 இதனால் கரையோரப் பிரதேசங்களுக்கு பாதுகாப்பு சோதனை சாவடிகள் பலப்படுத்தப்பட்டுள்ளதாகவும் பொலிஸ் உயர் அதிகாரி ஒருவர் தெரிவித்தார்.

 திருகோணமலை டொக்யாட் வீதி, சிறிமாபுர, அலஸ் தோட்டம், நிலாவெளி போன்ற முக்கிய இடங்களில் சொகுசு வாகனங்கள் நிறுத்தப்பட்டு சோதனைகள் முன்னெடுக்கப்பட்டு வருவதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

Advertisement

லங்கா4 (Lanka4)

அனுசரணை

Advertisement

Leave a Reply

உங்கள் மின்னஞ்சல் வௌியிடப்பட மாட்டாது. கட்டாயமான புலங்கள் * ஆக குறிக்கப்பட்டுள்ளன

அதிகம் படித்தது

Exit mobile version