இலங்கை
துப்பாக்கி சூட்டில் மறைந்த மங்களவின் பிரத்தியேக செயலாளர் காயம்
துப்பாக்கி சூட்டில் மறைந்த மங்களவின் பிரத்தியேக செயலாளர் காயம்
கந்தானையில் இன்று (3) காலை துப்பாக்கிச் சூட்டு சம்பவமொன்று இடம்பெற்றுள்ளதாக பொலிஸார் தெரிவித்தனர்.
துப்பாக்கிச் சூட்டு சம்பவத்தில் காயமடைந்தவர்களில் மறைந்த அமைச்சர் மங்கள சமரவீரவின் பிரத்தியேக செயலாளராக பணியாற்றிய சமீரா மனஹாரவும் உள்ளடங்குவதாக பொலிஸார் தெரிவித்தனர்.
கந்தானை பொதுச் சந்தைக்கு அருகில் காரில் இருந்த இருவரை இலக்கு வைத்து துப்பாக்கிச் சூடு நடத்தப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகிறது.
மேலும், துப்பாக்கிச் சூட்டில் காயமடைந்த இருவர் தற்போது ராகம வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளதாக பொலிஸ் ஊடகப்பிரிவு தெரிவித்துள்ளது.