இலங்கை

யாழில் பேருந்தை முந்திச் செல்ல முற்பட்டபோது விபத்து

Published

on

யாழில் பேருந்தை முந்திச் செல்ல முற்பட்டபோது விபத்து

  யாழ்.வடமராட்சி மந்திகைப் பகுதியில் இடம்பெற்ற வாகன விபத்தில் முதியவர் ஒருவர் காயமடைந்துள்ளார்.

இந்த விபத்துச் சம்பவம் இன்று 03) காலை இடம்பெற்றுள்ளது.

Advertisement

பாடசாலை சேவையில் ஈடுபட்ட பேருந்தை, முந்திச் செல்ல முற்பட்ட மோட்டார் சைக்கிலே விபத்தில் சிக்கியுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.

விபத்துச் சம்பவத்தில் 65 வயது மதிக்கத்தக்க முதியவர் ஒருவர் காயமடைந்த நிலையி்ல், பருத்தித்துறை ஆதார வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளார்.

மேலும் விபத்துத் தொடர்பில் மேலதிக விசாரணைகளை பருத்தித்துறை பொலிஸார் மேற்கொண்டுவருகின்றமை குறிப்பிடத்தக்கது.

Advertisement

Leave a Reply

உங்கள் மின்னஞ்சல் வௌியிடப்பட மாட்டாது. கட்டாயமான புலங்கள் * ஆக குறிக்கப்பட்டுள்ளன

அதிகம் படித்தது

Exit mobile version