இலங்கை

செம்மணிப் புதைகுழி அகழ்வு விரிவாக்கப்பட்ட பகுதியில் சான்றுப்பொருள் நேற்று அவதானம்!

Published

on

செம்மணிப் புதைகுழி அகழ்வு விரிவாக்கப்பட்ட பகுதியில் சான்றுப்பொருள் நேற்று அவதானம்!

யாழ்ப்பாணம் – செம்மணியில் அகழ்வுப் பணிகள் விரிவாக்கப்பட்ட பகுதியில் இருந்து ஆடையை ஒத்த சான்றுப்பொருளொன்று அவதானிக்கப்பட்டுள்ளது.

இதற்கு முன்னர் அகழ்வுப் பணிகள் இடம்பெற்ற பகுதிக்கு மேலதிகமாக, பிறிதொரு இடமும் மனிதப் புதைகுழியாக இருக்கலாம் என்று துறைசார் பேராசிரியர் ராஜ்சோமதேவ நீதிமன்றத்தின் கவனத்துக்கு ஏற்கனவே கொண்டு சென்றிருந்தார். அவரால் அடையாளப்படுத்தப்பட்ட இடத்தில் நீதிமன்ற அனுமதியுடன் நேற்றுமுன்தினம் அகழ்வுப் பணிகள் ஆரம்பிக்கப்பட்டிருந்தன.

Advertisement

இவ்வாறான நிலையிலேயே, நேற்றையதினம் புதிய பகுதியில் இருந்து ஆடையை ஒத்த சான்றுப்பொருளொன்று அவதானிக்கப்பட்டுள்ளது. தொடர்ச்சியான அகழ்வுப் பணிகள் இன்று முன்னெடுக்கப்படவுள்ளன.

Leave a Reply

உங்கள் மின்னஞ்சல் வௌியிடப்பட மாட்டாது. கட்டாயமான புலங்கள் * ஆக குறிக்கப்பட்டுள்ளன

அதிகம் படித்தது

Exit mobile version