இலங்கை

நோயின் வீரியம் தாங்க முடியாமல் முதியவர் உயிர்மாய்ப்பு!

Published

on

நோயின் வீரியம் தாங்க முடியாமல் முதியவர் உயிர்மாய்ப்பு!

யாழில் நோயின் வீரியம் தாங்கமுடியாத முதியவர் ஒருவர் நேற்றையதினம் தவறான முடிவெடுத்து உயிர்மாய்த்துள்ளளார். சுதுமலை தெற்கு, சாவல்கட்டு பகுதியை சேர்ந்த இராசா அழகரத்தினம்(வயது 73) என்பவரே இவ்வாறு உயிர்மாய்த்துள்ளார்.

இது குறித்து மேலும் தெரியவருகையில்; குறித்த முதியவர் பல்வேறு நோய்த்தாக்கங்களினால் பாதிக்கப்பட்டு காணப்பட்டார். இந்நிலையில் நோயின் வீரியம் தாங்க முடியாமல் நேற்றையதினம் தவறான முடிவெடுத்து உயிரிழந்துள்ளார்.

Advertisement

அவரை மீட்ட உறவினர்கள் யாழ்ப்பாணம் போதனா மருத்துவமனைக்கு கொண்டு சென்றவேளை அவர் ஏற்கனவே உயிரிழந்து விட்டதாக மருத்துவர்கள் தெரிவித்தனர்.

அவரது சடலம் மீதான மரண விசாரணைகளை திடீர் மரண விசாரணை அதிகாரி நமசிவாயம் பிறேம்குமார் மேற்கொண்டார். உடற்கூற்று பரிசோதனைகளின் பின்னர் சடலம் உறவினர்களிடம் ஒப்படைக்கப்பட்டுள்ளது.

Advertisement

Leave a Reply

உங்கள் மின்னஞ்சல் வௌியிடப்பட மாட்டாது. கட்டாயமான புலங்கள் * ஆக குறிக்கப்பட்டுள்ளன

அதிகம் படித்தது

Exit mobile version