இலங்கை
முன்னாள் அமைச்சருக்கு விளக்கமறியல்
முன்னாள் அமைச்சருக்கு விளக்கமறியல்
முன்னாள் அமைச்சர் எஸ்.எம். சந்திரசேனவை எதிர்வரும் 18 ஆம் திகதி வரை விளக்கமறியலில் வைக்குமாறு கொழும்பு புதுக்கடை நீதிமன்றம் இன்று பிற்பகல் உத்தரவிட்டுள்ளது.
எஸ்.எம் சந்திரசேன, 2015 ஜனாதிபதித் தேர்தலின் போது 25 மில்லியன் ரூபா பெறுமதியான சோளங்களை வழங்கியமை தொடர்பில் வாக்குமூலம் வழங்குவதற்காக இலஞ்சம் மற்றும் ஊழல் விசாரணை ஆணைக்குழுவில் இன்று முற்பகல் முன்னிலையாகியிருந்தார்.
இதன் போது இலஞ்சம் மற்றும் ஊழல் விசாரணை ஆணைக்குழு அதிகாரிகளால் கைது செய்யப்பட்டார்.
அதன்பின்னர் அவர் நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தப்பட்ட பின்னர் விளக்கமறியலில் வைக்கப்பட்டுள்ளார்.