இலங்கை

யாழில் விபத்தில் காயமடைந்த இளைஞன் உயிரிழப்பு

Published

on

யாழில் விபத்தில் காயமடைந்த இளைஞன் உயிரிழப்பு

  யாழ்ப்பாணம் காரைநகரில் இடம்பெற்ற விபத்தில் படுகாயமடைந்த இளைஞன் சிகிச்சை பலனின்றி உயிரிழந்துள்ளார்.

சம்பவத்தில் காரைநகர் – களபூமியைச் சேர்ந்த 22 வயதான இளைஞனே உயிரிழந்துள்ளார்.

Advertisement

கடந்த 1ஆம் திகதி இரவு காரைநகர் பாலத்தடியில் குறித்த இளைஞன் பயணித்த மோட்டார் சைக்கிளும் லான்ட்மாஸ்டரும் மோதி விபத்துக்குள்ளானது.

விபத்தில் படுகாயமடைந்த இளைஞன் யாழ்ப்பாணம் போதனா மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு சிகிச்சை பெற்று வந்த நிலையில் உயிரிழந்துள்ளார்.

மேலும் சம்பவம் தொடர்பில் ஊர்காவற்துறை பொலிஸார் விசாரணைகளை முன்னெடுத்துள்ளனர்.

Advertisement

Leave a Reply

உங்கள் மின்னஞ்சல் வௌியிடப்பட மாட்டாது. கட்டாயமான புலங்கள் * ஆக குறிக்கப்பட்டுள்ளன

அதிகம் படித்தது

Exit mobile version