சினிமா

10 வருஷமா குழந்தை இல்லை!! நிம்மதி இல்லாமல் விவாகரத்து முடிவில் வாரிசு நடிகரின் மனைவி..

Published

on

10 வருஷமா குழந்தை இல்லை!! நிம்மதி இல்லாமல் விவாகரத்து முடிவில் வாரிசு நடிகரின் மனைவி..

90ஸ் காலக்கட்டத்தில் தமிழ் சினிமாவில் பல வெற்றிப்படங்களை கொடுத்து கோலிவுட்டில் தவிர்க்க முடியாத இயக்குநராக திகழ்ந்து வந்தவர் தான் கண்ணாடி இயக்குநர். தன்னைப்போல் தன் மகனையும் சினிமாவில் பிரபலப்படுத்த வேண்டும் என்று சிறுவயதிலேயே நடிக்க வைத்திருக்கிறார்.அதன்பின் மகன் ஹீரோவாகினாலும், அவர் நடித்த படங்கள் பெயர் சொல்லும் அளவிற்கு ஓடவில்லை. அந்த கண்ணாடி இயக்குநர் பல நடிகர் நடிகைகளை அறிமுகப்படுத்தி இருந்தாலும் தன் வாரிசுக்கு நிலையான ஒரு அங்கீகாரம் கிடைக்கவில்லையே என்ற மன வருத்தம் மனதில் இருந்து வந்தது. டிவி நிகழ்ச்சியில் ஒரு நடிகையை பார்த்து காதலித்து திருமணத்தையும் செய்து கொண்டிருக்கிறார் அந்த வாரிசு நடிகர்.திருமணமாகி 10 ஆண்டுகள் ஆகியும் இன்னும் குழந்தையே பிறக்கவில்லை என்ற கேள்வியை பலரும் கேட்டு வந்துள்ளனர். குழந்தை பற்றி கேட்பவர்களுக்கு கணவன் – மனைவி இருவரும் அவ்வப்போது தக்க பதிலடி கொடுத்தும் வருகிறார்கள்.இப்படியான ஒரு நிலை வருவதால் மனைவிக்கும் வாரிசு நடிகருக்கும் இடையே மனக்கசப்பு ஏற்பட்டு சண்டையும் வருகிறதாம். குழந்தை இல்லாததால் அது தொடர்பாக இவர்களுக்குள் அடிக்கடி சண்டை வந்து கொண்டே இருப்பதால் இருவரும் வீட்டிலேயே இருந்தாலும் ஒருவருக்கொருவர் பேசிக்கொள்வதே இல்லையாம். ஆனால் மனைவிக்கோ, எப்படியாவது குழந்தை பெற்றுக்கொள்ள வேண்டும் என்ற ஆசை இருகிறதாம்.இதற்காக இருவரும் சிகிச்சை செய்தும் பலனளிக்காததால், வாரிசு நடிகர் குழந்தையை தத்தெடுத்து வளர்க்கலாம் என்ற முடிவை மனைவியிடம் கூறியிருக்கிறார். ஆனால் இதில் நடிகைக்கு உடன்பாடு இல்லாததால், இருவருக்கும் சண்டை அதிகரித்து வருகிறதாம். இப்படி தினமும் சண்டை வருவதால், இருவரும் சேர்ந்து இருக்க முடியாது என்று இருவரும் பிரிந்துவிடலாம் என்ற முடிவுக்கே வந்துவிட்டார்கள் என்று கோலிவுட் வட்டாரத்தில் பேச்சுக்கள் எழுந்து பரபரப்பை ஏற்படுத்தி இருக்கிறதாம்.

Advertisement

Leave a Reply

உங்கள் மின்னஞ்சல் வௌியிடப்பட மாட்டாது. கட்டாயமான புலங்கள் * ஆக குறிக்கப்பட்டுள்ளன

அதிகம் படித்தது

Exit mobile version