இலங்கை

இலங்கையில் சாதனை படைத்த மதுவரி திணைக்களம் ; 6 மாதத்தில் இலக்கை கடந்த வருவாய்

Published

on

இலங்கையில் சாதனை படைத்த மதுவரி திணைக்களம் ; 6 மாதத்தில் இலக்கை கடந்த வருவாய்

மதுவரித் திணைக்களம் 6 மாதங்களில் 120.5 பில்லியன் ரூபா குறிப்பிடத்தக்க வருமானத்தை ஈட்டியுள்ளதாக மதுவரித் திணைக்களம் தெரிவித்துள்ளது.

2025 ஜூன் 30 வரை 120.5 பில்லியன் வருமானத்தை ஈட்டியுள்ளதுடன் அது நிதி அமைச்சினால் வழங்கப்பட்டுள்ள இலக்கில் 102.6 % வீத வளர்ச்சியாகும்.

Advertisement

 அதன்படி 2022 ஆம் ஆண்டில் 170.3 பில்லியன், 2023 ஆம் ஆண்டில் 178.6 பில்லியன் ரூபாய்களும், 2024 ஆம் ஆண்டில் 226.7 பில்லியன் ரூபாய்களும் அரசாங்கத்திற்கு அறவிடுவதற்கு மதுவரித் திணைக்களம் செயற்பட்டுள்ளது.

ஒவ்வொரு அரசாங்கமும மதுபானம் மற்றும் புகையிலை அடிப்படையில் வரி விதிப்பு இடம்பெற்றுள்ளமை, அவர்களின் வருமானத்தை அதிகரிப்பதற்காக மாத்திரமன்றி அதன் உற்பத்திகளை நுகர்வதை கட்டுப்படத்துதல் மற்றும் அவ்வுற்பத்திகளுக்குக் காணப்படும் கேள்வியை குறைப்பதனால் சமூக மற்றும் சௌபாக்கிய பாதிப்புகளை குறைக்கும் நோக்கம் என திணைக்களம் சுட்டிக்காட்டியுள்ளது.  

Advertisement

Leave a Reply

உங்கள் மின்னஞ்சல் வௌியிடப்பட மாட்டாது. கட்டாயமான புலங்கள் * ஆக குறிக்கப்பட்டுள்ளன

அதிகம் படித்தது

Exit mobile version