இலங்கை

தமிழர் பகுதியில் கணவனை அடித்துகொன்ற மனைவி; பொலிஸ் விசாரணையில் திடுக்கிடும் தகவல்

Published

on

தமிழர் பகுதியில் கணவனை அடித்துகொன்ற மனைவி; பொலிஸ் விசாரணையில் திடுக்கிடும் தகவல்

   

மட்டக்களப்பு, வாழைச்சேனை பொலிஸ் பிரிவுக்கு உட்பட்ட மாஞ்சோலை பகுதியில் கணவன் உயிரிழந்த சம்பவம் தொடர்பில் சந்தேகத்தில் மனைவி பொலிஸார் கைது செய்துள்ளனர்.

Advertisement

குறித்த பகுதியில் நடக்க முடியாத நிலையில் சக்கர நாற்காலியில் வாழ்ந்து வந்த 73 வயதுடைய கணவன் அடி காயங்களுடன் கடந்த ஞாயிற்றுக்கிழமை (29) வாழைச்சேனை ஆதார வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளார்.

பின்னர் அவர் மேலதிக சிகிச்சைக்காக மட்டக்களப்பு போதனா வைத்தியசாலைக்கு மாற்றப்பட்ட நிலையில் சிகிச்சை பலனின்றி நேற்று (4) உயிரிழந்துள்ளார்.

இந்நிலையில் மனநிலை பாதிக்கப்பட்ட மனைவி ஊன்றுகோலால் தாக்கியதில் கணவன் காயமடைந்து வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்தாக பொலிஸாரின் விசாரணைகளின்போது தெரியவந்துள்ளது.

Advertisement

இதனையடுத்து மனநிலை பாதிக்கப்பட்ட மனைவி பொலிஸாரால் கைதுசெய்யப்பட்டுள்ளார்.

மேலும் சம்பவம் தொடர்பான மேலதிக விசாரணைகளை வாழைச்சேனை பொலிஸார் மேற்கொண்டு வருகின்றனர்.

Advertisement

Leave a Reply

உங்கள் மின்னஞ்சல் வௌியிடப்பட மாட்டாது. கட்டாயமான புலங்கள் * ஆக குறிக்கப்பட்டுள்ளன

அதிகம் படித்தது

Exit mobile version