இலங்கை

யாழில் விபரீதத்தில் முடிந்த முயற்சி ; நடுவீதியில் கவிழ்ந்த கனரக வாகனம்

Published

on

யாழில் விபரீதத்தில் முடிந்த முயற்சி ; நடுவீதியில் கவிழ்ந்த கனரக வாகனம்

யாழ்ப்பாணம் பருத்தித்துறை பிரதான வீதியின் உடுப்பிட்டி புறாப்பொறுக்கி பகுதியில் கட்டுப்பாட்டை இழந்த கனரக வாகனமொன்று இன்று காலை வீதியில் குடைசாய்ந்துள்ளது.

குறித்த சம்பவம் தொடர்பில் மேலும்‌ தெரியவருவதாவது

Advertisement

கற்கோவளம் பகுதியிலிருந்து வீதி புனரமைப்பு பணிக்கு பயன்படுதப்பட்ட ரோளர் வாகனத்தைத் ஏற்றிக்கொண்டு சென்ற கனரக வாகனமே புறாப்பொறுக்கி பகுதியில் குடைசாய்ந்துள்ளது.

முன்னால் துவிச்சக்கர வண்டியொன்றில் சென்றவர் கட்டுப்பாட்டை இழந்து குறித்த கனரக வாகனத்துடன் விபத்து ஏற்படவிருந்த நிலையில் அதனை தவிர்க்க முற்பட்ட வேலையே குறித்த வாகனம் குடைசாய்ந்துள்ளதாக தெரிவிக்கப்படுகிறது.

இது தொடர்பான விசாரணைகளை நெல்லியடி பொலிஸார் மேற்கொண்டு வருகின்றனர்.

Advertisement

Leave a Reply

உங்கள் மின்னஞ்சல் வௌியிடப்பட மாட்டாது. கட்டாயமான புலங்கள் * ஆக குறிக்கப்பட்டுள்ளன

அதிகம் படித்தது

Exit mobile version