இலங்கை
யாழ் பிரபல ஆலயத்தில் விக்கிரகம் திருட்டு; நாசவேலையை செய்தது யார்?
யாழ் பிரபல ஆலயத்தில் விக்கிரகம் திருட்டு; நாசவேலையை செய்தது யார்?
யாழ்ப்பாணம் நவாலி வடக்கு நாச்சிமார் ஆலயத்தில் இருந்த ஐம்பொன் எழுந்தருளி விக்கிரகம் திருடப்பட்டுள்ளது.
குறித்த ஆலயத்தின் கூரையைப் பிரித்து உள்ளே நுழைந்த திருட்டுக்கும்பல் விக்கிரகத்தை திருடிச் சென்றுள்ளனர்.
குறித்த விக்கிரகத்தின் பெறுமதி சுமார் 10 இலட்சம் எனத் தெரிவிக்கப்படுகிறது.
விக்கிரகம் திருடப்பட்டது தொடர்பில் மானிப்பாய் பொலிஸ் நிலையத்தில் முறைப்பாடு பதிவு செய்யப்பட்டுள்ளது.
முறைப்பாட்டுக்கமைய பொலிஸார் விசாரணைகளை மேற்கொண்டு வருகின்றனர்.