இலங்கை

யாழ் நகரில் தனியார் பேருந்துகளால் மக்கள் அசௌகரியம்

Published

on

யாழ் நகரில் தனியார் பேருந்துகளால் மக்கள் அசௌகரியம்

   யாழ்.பிரதான பேருந்து நிலையத்திற்கு முன்பாக வைத்தியசாலை வீதியில் நீண்டதூர சேவையில் ஈடுபடும் தனியார் பேருந்துகள் நீண்டநேரமாக நிறுத்தப்படுவதால் அங்கு வாகன நெரிசல் ஏற்படுவதாக  தெரிவிக்கபப்டுகின்றது.

மின்சார நிலைய வீதியிலிருந்து பயணிகளை ஏற்றி சேவையை ஆரம்பிக்கும் குறித்த தனியார் பேருந்துகள் ஆமை வேகத்தில் ஊர்ந்து செலவதாக விசனம் வெளியிடப்பட்டுள்ளது.

Advertisement

குறித்த தனியார் பேருந்துகள் அதிகளவானவர்களை ஏற்றுவதற்கு நேரத்தினை நகர்த்துவதற்காக வைத்தியசாலை வீதியில் பிரதான பேருந்து நிலையத்தின் முன்பாக நீண்ட நேரம் நடுவீதியில் நிறுத்தப்படுவதாக மக்கள் விசனம் தெரிவிக்கின்றனர்.

பேருந்து நிலையம், முச்சக்கரவண்டி தரிப்பிடம் காணப்படுகின்ற நகரின் மத்திய பகுதியில் இவ்வாறு பொறுப்பின்றி சாரதிகள் நடந்துகொள்வதாகவும் சுட்டிக்காட்டப்பட்டுள்ளது.

இதன் காரணமாக ஒரு வழிப்பாதையான இப்பாதையில் பின்னால் வரும் வாகனங்கள் செல்லமுடியாது காத்திருந்தே பயணிக்க வேண்டியுள்ளது.

Advertisement

அதேவேளை குறித்த இடத்தின் மிக அருகிலேயே பொலிஸ் பரிசோதனைச் சாவடி காணப்படுகின்றபோதும் பொலிஸாரும் எந்த நடவடிக்கை எடுக்கவில்லையெனவும் தெரிவிக்கபப்டுகின்றது.

Leave a Reply

உங்கள் மின்னஞ்சல் வௌியிடப்பட மாட்டாது. கட்டாயமான புலங்கள் * ஆக குறிக்கப்பட்டுள்ளன

அதிகம் படித்தது

Exit mobile version