இலங்கை

வாகன இறக்குமதி தொடர்பில் வெளியான அறிவிப்பு

Published

on

வாகன இறக்குமதி தொடர்பில் வெளியான அறிவிப்பு

நாட்டின் வாகன இறக்குமதியைக் கட்டுப்படுத்த எந்த முடிவும் எடுக்கப்படவில்லை என்று இலங்கை மத்திய வங்கி தெரிவித்துள்ளது.

சில ஊடக அறிக்கைகளை மறுத்துள்ள மத்திய வங்கி இந்த விடயத்தை தெளிவுபடுத்தியுள்ளது.

Advertisement

அந்தவகையில், வாகன இறக்குமதியைக் கட்டுப்படுத்துவது தொடர்பாக மத்திய வங்கிக்கும், திறைசேரிக்கும் இடையில் கடிதப் பரிமாற்றம் எதுவும் இடம்பெறவில்லை என்றும் மத்திய வங்கி தெரிவித்துள்ளது.

நாட்டின் வணிக வங்கி அமைப்பில் கிடைக்கும் டொலர் இருப்புகளிலிருந்தே, வாகன இறக்குமதிகள் செய்யப்படுகின்றன.

எனவே, வாகன இறக்குமதியின்போது, வெளிநாட்டு இருப்புக்களைப் பாதிக்காது என்றும் மத்திய வங்கி குறிப்பிட்டுள்ளது.

Advertisement

Leave a Reply

உங்கள் மின்னஞ்சல் வௌியிடப்பட மாட்டாது. கட்டாயமான புலங்கள் * ஆக குறிக்கப்பட்டுள்ளன

அதிகம் படித்தது

Exit mobile version