இலங்கை

வீட்டின் பின்னால் புதையல் தோண்டிய ஐந்து பேர் கைது

Published

on

வீட்டின் பின்னால் புதையல் தோண்டிய ஐந்து பேர் கைது

மாத்தறை 

தெனியாய, மெதெரிபிட்டியவில் உள்ள ஒரு வீட்டின் பின்னால் உள்ள ஒரு நிலத்தில் புதையல் தோண்டியதாகக் கூறப்படும் ஐந்து நபர்களும், அதற்காகப் பயன்படுத்தப்பட்ட உபகரணங்களும் இன்று (08) கைதுசெய்யப்பட்டதாக தெனியாய பொலிஸார் தெரிவித்தனர்.

Advertisement

மெதெரிபிட்டிய, கம்புருபிட்டிய மற்றும் கொழும்பு பகுதிகளைச் சேர்ந்த 35-45 வயதுக்குட்பட்ட நபர்களே இவ்வாறு கைதுசெய்யப்பட்டுள்ளதாக ஆரம்ப கட்ட விசாரணைகளில் தெரியவந்துள்ளது.

மெதெரிபிட்டியவில் உள்ள ஒரு வீட்டின் பின்னால் புதையல் தோண்டப்படுவதாக கிடைத்த தனிப்பட்ட தகவலின் அடிப்படையில் நேற்று (07) இரவு 12.45 மணியளவில் இந்த சோதனை நடத்தப்பட்டது.

வீட்டின் அருகே சுமார் 4 அடி ஆழத்தில் ஒரு குழி தோண்டப்பட்டு, வீட்டின் பிரதான நுழைவாயிலுக்கு முன்னால் மலர் விளக்குகளை வைத்து, விளக்குகளை ஏற்றி பூஜை செய்வதைக் கண்டதாக சோதனைக்குச் சென்ற பொலிஸ் அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.

Advertisement

இரண்டு மண்வெட்டிகள், ஒரு வாழைப்பழம், எலுமிச்சை, மலர் விளக்குகள், பழங்கள், வெற்றிலை, பல தீப்பந்தங்கள், தேங்காய் எண்ணெய், ஆரஞ்சு, புகைபிடிக்கும் குழாய் மற்றும் பால் பாக்கெட்டுகள் என்பன சம்பவ இடத்தில் கண்டுபிடிக்கப்பட்டுள்ளனவென பொலிஸார் தெரிவித்துள்ளனர்.

 

Advertisement

Leave a Reply

உங்கள் மின்னஞ்சல் வௌியிடப்பட மாட்டாது. கட்டாயமான புலங்கள் * ஆக குறிக்கப்பட்டுள்ளன

அதிகம் படித்தது

Exit mobile version