இலங்கை

தையிட்டியில் இன்று போராட்டம்

Published

on

தையிட்டியில் இன்று போராட்டம்

தையிட்டியில் சட்டவிரோதமாக அமைக்கப்பட்டுள்ள திஸ்ஸ விகாரைக் கட்டுமானத்தை உடனடியாக அகற்றக் கோரியும், அதனைச் சூழவுள்ள தமிழ்மக்களுக்குச் சொந்தமான தனியார் காணிகளை மீளவும் உரிமையாளர்களிடம் ஒப்படைக்க வலியுறுத்தியும் பாதிக்கப்பட்ட மக்களுடன் இணைந்து தமிழ்த்தேசிய மக்கள் முன்னணி நடத்தும் கவனவீர்ப்புப் போராட்டம் இன்று புதன்கிழமை மாலை 4.30 மணியளவில் குறித்த விகாரைக்கு அருகில் மீண்டும் ஆரம்பமாகி மாலை 6.30 மணி வரை இடம்பெறவுள்ளது.

பூரணை தினமான நாளை வியாழக்கிழமை காலை 06.30 மணி முதல் மாலை 6 மணி வரை தொடர் கவனவீர்ப்புப் போராட்டம் இடம்பெறும்.

Advertisement

இந்தப் போராட்டத்தில் அனைத்துத் தரப்பினரையும் கலந்துகொள்ளுமாறு தமிழ்த்தேசிய மக்கள் முன்னணியின் பொதுச் செயலாளர் செல்வராசா கஜேந்திரன் கேட்டுள்ளார்.

Leave a Reply

உங்கள் மின்னஞ்சல் வௌியிடப்பட மாட்டாது. கட்டாயமான புலங்கள் * ஆக குறிக்கப்பட்டுள்ளன

அதிகம் படித்தது

Exit mobile version