இலங்கை
யாழில் தோண்ட தோண்ட வெளிவரும் எழும்பு கூடுகள் ; மக்கள் மத்தியில் பெரும் அதிர்ச்சி
யாழில் தோண்ட தோண்ட வெளிவரும் எழும்பு கூடுகள் ; மக்கள் மத்தியில் பெரும் அதிர்ச்சி
யாழ்ப்பாணம் செம்மணி சித்தப்பாத்தி இந்து மயானத்தில் தொடர்ச்சியாக அகழ்வு பணிகள் முன்னெடுக்கப்பட்டு வரும் நிலையில் அங்கு அடையாளம் காணப்படும் மற்றும் மீட்கப்படும் எலும்புக்கூடுகளின் எண்ணிக்கை நாளுக்கு நாள் அதிகரித்த வண்ணம் காணப்படுகின்றமை மக்கள் மத்தியில் அச்சத்தையும் அதிர்ச்சியையும் ஏற்படுத்தியுள்ளது.
அந்த வகையில் இரண்டாவது கட்டத்தின் 13வது நாள் அகழ்வுப் பணிகள் செவ்வாய்க்கிழமை முன்னெடுக்கப்பட்டது. அந்த வகையில் 56 எலும்புக்கூடுகள் இதுவரை அடையாளம் காணப்பட்டுள்ளன. அத்துடன் 50 எலும்புக்கூடுகள் மீட்கப்பட்டுள்ளன.
யாழ்ப்பாணம் நீதிவான் ஏ.ஏ.ஆனந்தராஜா முன்னிலையில், தொல்லியல் துறை பேராசிரியர் ராஜ்சோமதேவாவின் குழுவின் பங்கேற்புடன் இந்த அகழ்வுப் பணிகள் முன்னெடுக்கப்பட்டன.
தொல்லியல் துறை பேராசிரியர் ராஜ்சோமதேவாவினால் அடையாளப்படுத்தப்பட்ட பகுதியிலும் எலும்புக்கூடுகள் மீட்கப்பட்டுள்ளன.
அந்த எலும்புக்கூடுகள் சிக்கலான நிலையில் காணப்படுகிறது.
மேலும் முறைப்பாட்டாளரான குறித்த மயானத்தின் நிர்வாகத்தில் உள்ள கிருபாகரன், சட்டத்தரணி க.சுகாஷ், சட்டத்தரணி ரணித்தா ஆகியோர் புதைகுழியை பார்வையிட்டனர்.
குறித்த புதைகுழி விவகாரமானது சர்வதேச ரீதியில் மிகப்பெரிய அதிர்வலைகளை ஏற்படுத்தியிருந்த நிலையில், அதற்கு நீதி வேண்டி பல்வேறு நாடுகளிலும் போராட்டங்கள் முன்னெடுக்கப்பட்டு வருகின்றமை குறிப்பிடத்தக்கது.