இலங்கை

வெளிநாடொன்றில் இலங்கையரின் மோச செயல் ; பல இலங்கையர்களுக்கு நேர்ந்த கதி

Published

on

வெளிநாடொன்றில் இலங்கையரின் மோச செயல் ; பல இலங்கையர்களுக்கு நேர்ந்த கதி

ஜப்பானில் இருந்து பல இலங்கையர்களை ஏமாற்றிய இலங்கையர் ஒருவர் நேற்றைய தினம் கைது செய்யப்பட்டுள்ளார்.

ஜப்பானில் குடியேற்ற அதிகாரிகளிடம் தவறான ஆவணங்களை சமர்ப்பித்து சக இலங்கையர்களுக்கு சட்டவிரோதமாக வதிவிடம் பெற உதவியதாக சந்தேகத்தின் பேரில் அவர் கைது செய்யப்பட்டுள்ளார்.

Advertisement

44 வயதான மொஹமட் இர்பான் என்பவரே இவ்வாறு கைது செய்யப்பட்டுள்ளதாக ஜப்பானிய பொலிஸார் தெரிவித்துள்ளனர்.

குறித்த நபரின் மூலம் போலி ஆவணங்களை வழங்கி விசா பெற்ற 9 இலங்கையர்கள் அடையாளம் காணப்பட்டுள்ளனர்.

மோசடியான முறையில் விசாவை பெற்றுக்கொடுக்க பெருந்தொகை பணத்தை அவர் பெற்றுள்ளதாக தெரிவிக்கப்படுகிறது.

Advertisement

சம்பவம் தொடர்பில் ஜப்பானிய அதிகாரிகள் விசாரணைகளை ஆரம்பித்துள்ளனர்.

போலி ஆவணங்களை சமர்ப்பித்தவர்களுக்கு எதிராக சட்ட நடவடிக்கை எடுக்கப்படவுள்ளதாக தெரிவிக்கப்படுகிறது.  

Advertisement

Leave a Reply

உங்கள் மின்னஞ்சல் வௌியிடப்பட மாட்டாது. கட்டாயமான புலங்கள் * ஆக குறிக்கப்பட்டுள்ளன

அதிகம் படித்தது

Exit mobile version