இலங்கை

வேலைக்கு செல்லும் முன்னாள் பிரதமர் ரிஷி சுனக்

Published

on

வேலைக்கு செல்லும் முன்னாள் பிரதமர் ரிஷி சுனக்

இங்கிலாந்தின் முன்னாள் பிரதமர் ரிஷி சுனக் ஒரு தனியார் நிறுவனத்திற்கு வேலைக்கு செல்ல இருப்பதாக தகவல் வெளியாகியுள்ளது.

இந்நிலையில் அவருக்கு வரும் சம்பளம் முழுவதையும் அவர் அறக்கட்டளை ஒன்றுக்கு நன்கொடையாக கொடுக்க இருப்பதாகவும் தகவல்கள் வெளியாகியுள்ளன.

Advertisement

கடந்த 2022 ஆம் ஆண்டு பிரிட்டன் பிரதமராக இருந்த போரிஸ் ஜான்சன் பதவி விலகியபோது, பிரதமராக இந்திய வம்சாவளியை சேர்ந்த ரிஷி சுனக் தேர்வு செய்யப்பட்டார்.

கடந்த ஆண்டு நடந்த பொதுத்தேர்தலில் அவரது கட்சி தோல்வியடைந்ததை அடுத்து, பிரதமர் பதவியில் இருந்து அவர் ராஜினாமா செய்த நிலையில் அவர் தற்போது எம்.பி. ஆக உள்ளார்.

இந்த நிலையில், அமெரிக்காவை சேர்ந்த நிதி நிறுவனத்தில் அவர் மீண்டும் வேலைக்கு சேர்ந்துள்ளார். முதுநிலை ஆலோசகர் என்ற பணியில் அவர் இணைந்துள்ளதாகவும், அந்நிறுவனத்தின் தலைமை செயல் அதிகாரி அறிவித்துள்ளார்.

Advertisement

இந்த நிறுவனத்தில் இருந்து தனக்கு கிடைக்கும் சம்பளம் முழுவதையும் அவர் ‘தி ரிச்மண்ட் திட்டம்’ என்ற அறக்கட்டளைக்கு நன்கொடையாக வழங்குவார் என்றும் அறிவிக்கப்பட்டது  

Leave a Reply

உங்கள் மின்னஞ்சல் வௌியிடப்பட மாட்டாது. கட்டாயமான புலங்கள் * ஆக குறிக்கப்பட்டுள்ளன

அதிகம் படித்தது

Exit mobile version