இலங்கை

தமிழர் பகுதியில் ஐஸ் போதைப்பொருளுடன் பெண்ணொருவர் கைது

Published

on

தமிழர் பகுதியில் ஐஸ் போதைப்பொருளுடன் பெண்ணொருவர் கைது

திருகோணமலை – கிண்ணியாவில் 12420 மில்லிகிராம் ஐஸ் போதைப்பொருளை, விற்பனை செய்வதற்காக உடமையில் வைத்திருந்த பெண்ணொருவர் கைது செய்யப்பட்டுள்ளார்.

குறித்த பெண் நேற்றிரவு கைது செய்யப்பட்டதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர்.

Advertisement

கிண்ணியா – மகரூப் பிரதேசத்தை சேர்ந்த, 57 வயதான குடும்ப பெண்ணே இவ்வாறு கைது செய்யப்பட்டவராவார்.

கிண்ணியா பொலிஸ் விசேட புலனாய்வு பிரிவுக்கு கிடைக்கப்பெற்ற, இரகசிய தகவலின் அடிப்படையில், சந்தேக நபர் கைது செய்யப்பட்டுள்ளார் என கிண்ணியா குற்றத்தடுப்பு பொலிஸ் பொறுப்பதிகாரி தெரிவித்துள்ளார்.

மேலதிக நடவடிக்கைகளுக்காக, சந்தேகநபரை இன்றையதினம் திருகோணமலை நீதவான் நீதிமன்றத்தில் முன்னிலைபடுத்தவுள்ளதாகவும் பொலிஸ் பொறுப்பதிகாரி கூறியுள்ளார்.   

Advertisement

Leave a Reply

உங்கள் மின்னஞ்சல் வௌியிடப்பட மாட்டாது. கட்டாயமான புலங்கள் * ஆக குறிக்கப்பட்டுள்ளன

அதிகம் படித்தது

Exit mobile version