இலங்கை
தையிட்டி சட்டவிரோத விகாரைக்கு எதிராக போராட்டம்!
தையிட்டி சட்டவிரோத விகாரைக்கு எதிராக போராட்டம்!
யாழ். தையிட்டியில் சட்டவிரோதமாக அமைக்கப்பட்டுள்ள விகாரைக்கு எதிர்ப்புத் தெரிவித்து முன்னெடுக்கப்பட்டுவரும் போராட்டம் பௌர்ணமி தினமான இன்றும் மேற்கொள்ளப்பட்டு வருகின்றது.
இன்று காலை ஆரம்பிக்கப்பட்டுள்ள போராட்டம் மாலை ஆறு மணி வரை இடம்பெறும் என தமிழ்த்தேசிய மக்கள் முன்னணியினர் தெரிவித்துளளனர்.
விகாரை அகற்றப்பட்டு, காணிகள் உரிமையாளர்களிடம் ஒப்படைக்கப்பட வேண்டும் என வலியுறுத்தும் நோக்கத்தோடு நடைபெறும் இந்தப் போராட்டத்தில் காணி உரிமையாளர்கள், தமிழ்த்தேசிய மக்கள முன்னணியின் முன்னாள் நாடாளுமன்ற உறுப்பினர் கஜேந்திரன், சமத்துவக் கட்சியின் முன்னாள் நாடாளுமன்ற உறுப்பினர் மு. சந்திரகுமார். சட்டத்தரணி காண்டீபன், பிரதேசசபை உறுப்பினர்கள் ஆகியோர் கலந்துகொண்டனர்..