இலங்கை

நீண்ட கால வாழைச்சேனை போதை பொருள் வியாபாரி கைது

Published

on

நீண்ட கால வாழைச்சேனை போதை பொருள் வியாபாரி கைது

நீண்ட காலமாக போதை பொருள் வியாபாரம் செய்து வந்த வியாபாரி இன்று (10) அதிகாலை கைது செய்யப்பட்டுள்ளதாக வாழைச்சேனை பொலிஸ் நிலைய பொறுப்பதிகாரி லசந்த பண்டார தெரிவித்தார்.

இரகசிய தகவலின் அடிப்படையில் பொலன்னறுவையை சேர்ந்த பிரபல போதைப்பொருள் வியாபாரி ஒருவர் இன்று (10) அதிகாலை புனாணை, ரிதிதென்ன பிரதேசத்தில் வைத்து போதைப் பொருளுடன் கைது செய்யப்பட்டுள்ளார்.

Advertisement

குறித்த வியாபாரி கொழும்பு மற்றும் ஏனைய பிரதேசங்களிலிருந்து போதைப் பொருட்களைக் கொண்டு வந்து கல்குடாப்பிரதேசத்தில் வினியோகித்து வந்துள்ளதாக ஆரம்ப விசாரணையில் தெரிய வந்துள்ளதாக வாழைச்சேனை பொலிஸார் தெரிவித்தனர்.

கைது செய்யப்பட்ட சந்தேக நபரிடமிருந்து 5,320 மில்லி கிராம் ஐஸ் போதைப்பொருளும்100 கிராம் கேரளா கஞ்சாவும் கைப்பற்றப்பட்டுள்ளன.

கைதான சந்தேக நபரையும் சான்றுப்பொருட்களையும் சட்ட நடவடிக்கைக்காக நீதிமன்றில் ஆஜர்படுத்த வாழைச்சேனை பொலிஸார் நடவடிக்கை மேற்கொண்டுள்ளனர்.

Advertisement

அத்துடன், மேலதிக விசாரணைகளையும் வாழைச்சேனை பொலிஸார் மேற்கொண்டு வருகின்றனர்.

Leave a Reply

உங்கள் மின்னஞ்சல் வௌியிடப்பட மாட்டாது. கட்டாயமான புலங்கள் * ஆக குறிக்கப்பட்டுள்ளன

அதிகம் படித்தது

Exit mobile version