இலங்கை
அமெரிக்காவின் வரிவிதிப்பு; சிக்கலில் ஆடைத்துறை!
அமெரிக்காவின் வரிவிதிப்பு; சிக்கலில் ஆடைத்துறை!
இலங்கையிலிருந்து இறக்குமதி செய்யப்படும் பொருள்களுக்கு அமெரிக்க ஜனாதிபதி டொனால்ட் ட்ரம்ப் நிர்ணயித்துள்ள 30% வரியைவிடக் குறைவான வரியை இலங்கையால் நிர்ணயிக்கமுடியாவிட்டால் இலங்கையின் ஆடைத்துறைக்கு நெருக்கடி ஏற்படும் எனக் கூட்டு ஆடைச் சங்க மன்றத்தின் தலைவர் யோஹான் லாரன்ஸ் எச்சரித்துள்ளார்.
இலங்கையின் ஆடை ஏற்றுமதியில் சுமார் 40% அமெரிக்காவுக்கே செல்கிறது. கடந்த ஆண்டு 1.9 பில்லியன் டொலர் வருமானம் அமெரிக்காவுக்கு ஆடை ஏற்றுமதி செய்யப்பட்டதன் மூலம் ஈட்டப்பட்டுள்ளது. இலங்கையின் மூன்றாவது பெரிய அந்நியச் செலாவணி அமெரிக்காவிலிருந்தே ஈட்டப்படுகிறது.
வியட்நாம் போன்ற போட்டியாளர்கள் குறைந்த வரிகளை அமெரிக்காவிடமிருந்து பெற்றுள்ளதால் இலங்கை சிக்கலில் உள்ளது. ஆனால், நாம் பேச்சுகளைத் தொடரமுடியும். இத்துறையில் 3 இலட்சத்துக்கும் அதிகமானோர் பணியாற்றி வருகின்றனர். அவர்களில் பெரும்பாலானோர் பெண்கள். எனவே, இந்தத் தொழிற்றுறையைப் பாதுகாக்க அமெரிக்காவுடன் சிறந்த உடன்பாடுகளை எட்டவேண்டிய கட்டாயம் உள்ளது என்றும் அவர் குறிப்பிட்டுள்ளார்.