இந்தியா

இந்தியாவில் வேகமாக பரவும் நிபா வைரஸ் – 18 வயது பெண் மரணம்

Published

on

இந்தியாவில் வேகமாக பரவும் நிபா வைரஸ் – 18 வயது பெண் மரணம்

இந்தியாவில் நிபா வைரஸால் ஒரு பெண் ஒருவர் இறந்துள்ளார், இது “அடுத்த தொற்றுநோயை” தூண்டக்கூடும் என்று நிபுணர்கள் அஞ்சுகின்றனர்.

18 வயது சிறுமி நிபா வைரஸுக்கு நேர்மறை சோதனை செய்த பின்னர் மருத்துவமனைக்கு கொண்டு செல்லப்பட்டார், பின்னர் அவர் உயிரிழந்துள்ளார்.

Advertisement

இது பழ வௌவால்களால் பரவி, அவற்றின் கழிவுகள் மற்றும் உமிழ்நீர் மூலம் மனிதர்களுக்கு பரவுகிறது. இது தட்டம்மை போன்ற ஒரே குடும்பத்தைச் சேர்ந்தது மற்றும் மக்களிடையே எளிதில் பரவுகிறது.

ஜூலை 1 ஆம் திகதி குறித்த வைரஸால் பாதிக்கப்பட்ட பெண் ஒருவர் உயிரிழந்துள்ளார். இதனைத் தொடர்ந்து நூற்றுக்கணக்கானோர் வைரஸ் தாக்குதலுக்கு உள்ளாகியுள்ளமை கண்டறியப்பட்டுள்ளது.

சிலர் ஏற்கனவே தீவிர சிகிச்சையில் உள்ளதாக அதிகாரிகள் குறிப்பிட்டுள்ளனர். 38 வயதான இரண்டாவது பெண் இந்த நோயால் பாதிக்கப்பட்டு ஆபத்தான நிலையில் உள்ளார்.

Advertisement

மூன்று மாவட்டங்களில் மொத்தம் 425 பேர் அந்தப் பெண்ணின் தொடர்புகள் என அடையாளம் காணப்பட்டுள்ளதாக சுகாதார அதிகாரிகள் உறுதிப்படுத்தினர்.

லங்கா4 (Lanka4)

அனுசரணை

Advertisement

Leave a Reply

உங்கள் மின்னஞ்சல் வௌியிடப்பட மாட்டாது. கட்டாயமான புலங்கள் * ஆக குறிக்கப்பட்டுள்ளன

அதிகம் படித்தது

Exit mobile version