இலங்கை
இலங்கையின் பிரபல முன்னாள் கிரிக்கெட் வீரரின் மனைவி சர்ச்சையில் சிக்கினார்!
இலங்கையின் பிரபல முன்னாள் கிரிக்கெட் வீரரின் மனைவி சர்ச்சையில் சிக்கினார்!
இலங்கை கிரிக்கெட் அணியின் முன்னாள் வீரர் ஹஷான் திலகரத்னவின்(Hashan Tillakaratne) மனைவி அப்சாரி(Apsari) திலகரத்ன, தற்போது விமான சேவையில் பணியாற்றவில்லை என்றாலும், சிறிலங்கன் எயர்லைன்ஸின் சீருடையான புடவையை அணிந்துகொண்டு ஒரு வலைத்தளத்திற்கு அளித்த நேர்காணல் காரணமாக சர்ச்சையில் சிக்கியுள்ளார்.
முன்னதாக ஏர்லங்கா என்ற பெயரில் அறியப்பட்ட தேசிய விமான சேவையில் விமானப் பணிப்பெண்ணாக பணியாற்றிய அப்சாரி, அந்த சீருடையை அணிந்து கொடுத்த நேர்காணலில் தோன்றியமை குறித்து விமான சேவை அதிகாரிகள் கவலை வெளியிட்டுள்ளனர்.
பணியிலிருந்து விலகும்போது சீருடைகளை ஒப்படைக்கவேண்டும்
சிறிலங்கன் எயார்லைன்ஸ் நிறுவனத்தின் சிரேஷ்ட அதிகாரி ஒருவர் கூறுகையில், நிறுவனத்தை விட்டு விலகும் ஊழியர்கள், குறிப்பாக கபின் குழுவினர், தங்கள் சீருடைகள் மற்றும் தொடர்புடைய உபகரணங்களை ஒப்படைக்க வேண்டும் என்பது கட்டாயமாகும்.
சட்டரீதியான நடவடிக்கை
இதனை மீறி சீருடையை அங்கீகரிக்கப்படாத வகையில் பயன்படுத்தியதற்காக, அப்சாரி திலகரத்ன மீது சட்டரீதியான நடவடிக்கை எடுப்பது குறித்து விமான சேவை தற்போது சட்ட ஆலோசனையை நாடிவருவதாக தெரிவித்துள்ளார்.