இலங்கை
கெஹெலியருக்கு எதிரான வழக்கு விசாரணை ஒத்திவைப்பு
கெஹெலியருக்கு எதிரான வழக்கு விசாரணை ஒத்திவைப்பு
தரமற்ற மனித இம்யூனோகுளோபுலின் தடுப்பூசி அளவுகளை வாங்கியது தொடர்பாக முன்னாள் சுகாதார அமைச்சர் கெஹெலிய ரம்புக்வெல்ல மற்றும் பிற பிரதிவாதிகளுக்கு எதிரான குற்றப்பத்திரிகைகளை ஒப்படைப்பதை செப்டம்பர் 16 ஆம் திகதி வரை ஒத்திவைக்க மூன்று நீதிபதிகள் கொண்ட அமர்வு, வெள்ளிக்கிழமை (11) முடிவு செய்தது.
சட்டமா அதிபர் விடுத்த கோரிக்கையை பரிசீலித்த பின்னர் இந்த முடிவை நீதிபதி அமர்வு எடுத்தது.