இலங்கை

ட்ரம்பின் வரி விதிப்பால் இலங்கையில் ஏற்படவுள்ள பாதிப்பு ; ரணில் வெளிப்படுத்திய தகவல்

Published

on

ட்ரம்பின் வரி விதிப்பால் இலங்கையில் ஏற்படவுள்ள பாதிப்பு ; ரணில் வெளிப்படுத்திய தகவல்

அமெரிக்க ஜனாதிபதி டொனால்ட் டிரம்பின் வரி விதிப்புகளால் நாட்டிற்கு ஏற்படும் நெருக்கடி குறித்து முன்னாள் ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்க கருத்துக்களை தெரிவித்துள்ளார்.

இதன்படி, ஆடைத் தொழிற்துறை உட்பட இந்தியாவுடன் கையெழுத்திடுவதற்கு உத்தேசிக்கப்பட்டிருந்த ஒப்பந்தங்கள் கையெழுத்தாகாததால் எமக்கு நிவாரணங்களைப் பெற்றுக் கொள்வதிலும் நெருக்கடி ஏற்படும் என குறிப்பிட்டுள்ளார்.

Advertisement

நமது பொருளாதாரம் ஆடைகள் மற்றும் தொழிலுக்காக வெளிநாடுகளுக்குச் செல்வதால் கிடைக்கும் அந்நிய செலாவணியை அடிப்படையாகக் கொண்டது. இவ்வாறு பொருளாதாரத்தை வெறுமனே ஆடை ஏற்றுமதியால் மாத்திரம் இயக்க முடியும் என்று எண்ணினால் அது தவறு.

அடுத்த ஆண்டு ஐரோப்பாவில் பொருளாதார சரிவு ஏற்பட்டால், அந்தப் பக்கத்திலிருந்தும் நாம் பாதிக்கப்படுவோம். இந்நிலையில் இந்தியாவுடன் தேவையான ஒப்பந்தங்கள் கையெழுத்தாகாததால், அந்தப் பக்கத்திலிருந்தும் நிவாரணத்தை எதிர்பார்க்க முடியாது.

நான் கூறியது போல் செயற்பட்டிருந்தால் இந்த ஆபத்தான சூழ்நிலை ஏற்பட்டிருக்காது என முன்னாள் ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்க இதன் போது சுட்டிக்காட்டினார்.

Advertisement

Leave a Reply

உங்கள் மின்னஞ்சல் வௌியிடப்பட மாட்டாது. கட்டாயமான புலங்கள் * ஆக குறிக்கப்பட்டுள்ளன

அதிகம் படித்தது

Exit mobile version