இலங்கை
துப்பாக்கியுடன் கைதான முன்னாள் இராணுவ சிப்பாய்
துப்பாக்கியுடன் கைதான முன்னாள் இராணுவ சிப்பாய்
இவ்வாறு கைதுசெய்யப்பட்டவர் பிலியந்தலை பிரதேசத்தைச் சேர்ந்த 51 வயதுடைய முன்னாள் இராணுவ சிப்பாய் ஆவார்.
இவர் கொழும்பு – பிலியந்தலை பிரதேசத்தில் வெளிநாட்டுத் துப்பாக்கியுடன் நேற்று வெள்ளிக்கிழமை (11) மாலை குற்றப் புலனாய்வு திணைக்கள அதிகாரிகளால் கைது செய்யப்பட்டுள்ளார்.
குற்றப் புலனாய்வு திணைக்கள அதிகாரிகளுக்கு கிடைக்கப்பெற்ற இரகசிய தகவலுக்கு அமைய மேற்கொள்ளப்பட்ட சுற்றிவளைப்பின் போதே சந்தேக நபர் கைது செய்யப்பட்டுள்ளார்.