இலங்கை

ராஜித சேனாரத்ன கைது நடவடிக்கையைத் தவிர்க்க முயற்சி : நீதிமன்றத்தில் இலஞ்ச ஊழல் ஆணைக்குழு தகவல்

Published

on

ராஜித சேனாரத்ன கைது நடவடிக்கையைத் தவிர்க்க முயற்சி : நீதிமன்றத்தில் இலஞ்ச ஊழல் ஆணைக்குழு தகவல்

26.2 மில்லியன் ரூபாய் நிதி இழப்பை ஏற்படுத்திய மணல் அகழ்வு ஒப்பந்தம் தொடர்பான வழக்கில், முன்னாள் கடற்றொழில் அமைச்சர் ராஜித சேனாரத்ன கைது நடவடிக்கையைத் தவிர்த்து வருவதாக இலஞ்ச ஊழல் ஆணைக்குழு வெள்ளிக்கிழமை கொழும்பு நீதிமன்றத்திற்குத் தெரிவித்துள்ளது.

ராஜித சேனாரத்ன தனது தொலைபேசி இணைப்பைத் துண்டித்துவிட்டதாகவும், தனது வசிப்பிடத்தைக் கைவிட்டுவிட்டதாகவும், பல அழைப்பாணைகளை புறக்கணித்துவிட்டதாகவும் ஆணைக்குழு அதிகாரிகள் தெரிவித்தனர். 

Advertisement

மேலும், அவரது வழக்கறிஞர் மூலம் சமர்ப்பிக்கப்பட்ட மருத்துவ அறிக்கை செல்லுபடியாகாது என்றும் ஆணைக்குழு குறிப்பிட்டது.

சந்தேக நபர்களைக் கைது செய்ய ஆணைக்குழுவுக்கு அதிகாரம் உள்ளது என்பதை நீதிமன்றம் மீண்டும் வலியுறுத்தி, அதற்கேற்ப செயல்படுமாறு அறிவுறுத்தியது.

Advertisement

Leave a Reply

உங்கள் மின்னஞ்சல் வௌியிடப்பட மாட்டாது. கட்டாயமான புலங்கள் * ஆக குறிக்கப்பட்டுள்ளன

அதிகம் படித்தது

Exit mobile version